தெலுங்கில் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஹிட் அடித்துள்ள, புஷ்பா தி ரைஸ் என்ற படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் அல்லு அர்ஜுன் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தெலுங்கில் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஹிட் அடித்துள்ள, புஷ்பா தி ரைஸ் என்ற படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் அல்லு அர்ஜுன் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Published on: December 6, 2024 at 1:54 pm
Pushpa Movie | இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளில் வெற்றி நடை போடும் படமாக அல்லு அர்ஜுனின் புஷ்பா உருவாகியுள்ளது. இந்தப் படத்தை சுகுமார் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாகமும் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றிகளை குவித்து வருகிறது.
முதல் நாள் வசூலை ரூபாய் 150 கோடியை தாண்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது அல்லு அர்ஜுன் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது படத்தில் இயக்குனரான சுகுமார் இந்த கதையை முதலில் மகேஷ் பாபுவிடம் கூறியுள்ளார்.
செம்மர கடத்தல் தொடர்பான கதை என்பதாலும் கதாநாயகனின் கதாபாத்திரம் குறித்தும் மகேஷ்பாபுவிற்கு விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் அவர் படத்தில் நடிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் படத்தின் கதையை அல்லு அர்ஜுனிடம் கூறி சுகுமார் நடிக்க வைத்துள்ளார். தற்போது இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றிகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ‘நான் எம்ஜிஆர் திமுக; அவர் காமராஜர் காங்கிரஸ்’: கண்ணதாசன் குறித்து ஓப்பனாக பேசிய வாலி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com