Actress Sai Pallavi: தாம் பெரும்பாலும் இரவு நேர சூட்டிங்கை தவிர்ப்பதாக நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவின் முன்னணி நாயகியாக சாய்பல்லவி திகழ்கிறார்.
Actress Sai Pallavi: தாம் பெரும்பாலும் இரவு நேர சூட்டிங்கை தவிர்ப்பதாக நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவின் முன்னணி நாயகியாக சாய்பல்லவி திகழ்கிறார்.
Published on: March 27, 2025 at 10:25 pm
மலையாளத்தில் பிரேமம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த நடிகை சாய் பல்லவி. தமிழ்நாட்டின் ஊட்டியை பூர்வீகமாக கொண்ட இவர், தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் முதல்முறையாக தியா என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல படங்களில் நடித்துள்ளார்.
அண்மையில் சிவ கார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம், இந்திய அளவில் சாய் பல்லவி புகழ்பெற்றார்.
இதைத்தொடர்ந்து நாக சைதன்யாவின் தெலுங்கு படமான தண்டேல் என்ற படத்தில் சாய் பல்லவி, நடித்திருந்தார். நாக சைதன்யா உடன் இது இவருக்கு இரண்டாவது திரைப்படமாகும். இந்தத் திரைப்படமும் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க நடிகையின் உதட்டில் முத்தமிட்ட நித்யா மேனன்.. பற்றி எரியும் பரபரப்பு காட்சி!
இந்த நிலையில் இரவு நேர சூட்டிங் குறித்து நடிகை சாய் பல்லவி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய நடிகை சாய் பல்லவி இரவு நேர சூட்டிங் பெரும்பாலும் தவிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் இரவு நேர சூட்டிங் தவிர்ப்பது ஏன் என்பது குறித்து சாய் பல்லவி விளக்கம் ஒன்றும் அளித்துள்ளார். அதில் என்னால் இரவு 9 மணிக்கு மேல் கண் விழித்திருக்க முடியாது; இதனால் நான் பெரும்பாலும் இரவு நேர சூட்டிங் தவிர்க்கிறேன்.
இதனால் என்னை இயக்குனர்கள் குழந்தை என்பார்கள்; பொதுவாக இரவு நேர சூட்டிங் என்றாலே எனக்கு பிரச்சனை தான். என்னை பொறுத்தவரை சரியான நேரத்தில் நான் அடம் பிடித்து தூங்கி விடுவேன்” என்றார்.
சாய் பல்லவி தற்போது ராமாயணம் போன்ற இதிகாச திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அந்தப் படத்தில் நடிக்கவில்லை; ஆனாலும்.. RRR குறித்து தீபிகா படுகோன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com