Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ. 45 குறைந்து விற்பனையாகிறது.
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ. 45 குறைந்து விற்பனையாகிறது.
Published on: October 28, 2024 at 9:50 am
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ. 7,360 ஆகவும், பவுன் ரூ. 58,880 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 45 குறைந்து கிராம் ரூ. 7,315 ஆகவும் பவுன் ரூ. 58,520 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,820 ஆகவும் பவுன் ரூ. 62,560ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை கிராம் ரூ.107 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.107,000 ஆகவும் நேற்றைய விலையிலேயே காணப்படுகின்றது.
இதையும் படிங்க கேரள லாட்டரி வின் வின் W-793; ரூ.75 லட்சம் வெல்லப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?
சென்னை, ஜூன் 30 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை (29 ஜூன் 2025) விடுத்துள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மனித உரிமைகளை சிறிதும் மதிக்காமல் ஸ்டாலின் காவல்துறை இளைஞரை அடித்தே கொலை செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு வந்த மருத்துவர் ஒருவர், அவரது மகிழுந்தில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகளை காணவில்லை என்று அளித்த புகாரின் அடிப்படையில், அவரது மகிழுந்தை நிறுத்துவதற்கு உதவி செய்த கோயிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமார் என்பவரை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரனை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்து விட்டார். அவரது உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும்? என்பதற்கான விதிகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நிலையில், அவற்றை மதிக்காத காவல்துறையினர் அஜித்குமாரை கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்துள்ளனர். தமிழகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய சாத்தான்குளம் காவல்நிலையப் படுகொலைகள் எவ்வாறு நடந்தனவோ, அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் அஜித்குமார் கொல்லப்பட்டுள்ளார். இதற்காக தமிழக காவல்துறையும், அதற்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரும் தலைகுனிய வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் படுதோல்வி அடைந்து விட்ட காவல்துறை அப்பாவிகளை விசாரணைக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளில் 28 பேர் காவல்நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ம்ர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இதைவிட கொடுமையான மனித உரிமை மீறல்கள் இருக்க முடியாது.
சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்ட போது,’’பேய் ஆட்சி செய்தால் பிணந்திண்ணும் சாத்திரங்கள் என்பதை இந்த படுகொலைகள் நினைவுபடுத்துகின்றன. இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனசாட்சி இருந்தால், 5 ஆண்டுகளுக்கு வலியுறுத்தியதைப் போல இப்போது பதவி விலக வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம்.. மராட்டியத்தில் மின் கட்டணம் குறைப்பு.. தமிழ்நாட்டில் அதிகரிப்பு ஏன்? அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திருவனந்தபுரம், ஜூன் 30 2025: கேரள லாட்டரி பாக்யதாரா பி.டி.9 லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று (திங்கள்கிழமை) மாலை 3 மணிக்கு வெளியாகிறது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும். இந்த லாட்டரி குலுக்கலானது, திருவனந்தபுரம் பேக்கரி ஜங்ஷன் அருகில் உள்ள கோர்கி லாட்டரி பவனில் நடைபெறுகிறது.
பரிசு விவரம்
லாட்டரி முடிவுகளை பார்ப்பது எப்படி?
கேரள லாட்டரியின் முடிவுகளைப் பார்க்க www.keralalottery.info என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிடவும். மேலும், கேரள அரசு அரசிதழ் அலுவலகத்திலும் நீங்கள் வெற்றி எண்களை நேரில் சரிபார்க்கலாம்.
இதையும் படிங்க : 6 மாதத்தில் 30 சதவீதம் ரிட்டன்.. இந்த டிஃபென்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்கள் தெரியுமா?
பரிசுத் தொகை எப்படி கிடைக்கும்?
லாட்டரி பங்கேற்பாளர்கள் தங்களிடம் உள்ள லாட்டரி டிக்கெட் எண்களை கேரள அரசு அரசிதழில் வெளியிடப்பட்ட வெற்றி எண்களுடன் சரிபார்த்துக் கொள்ளலாம். இதில், அவர்களின் எண் பொருந்தினால், அவர்கள் அந்தந்த பரிசுத் தொகையைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
பரிசு பெற என்னென் ஆவணங்கள் தேவை
(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)
இதையும் படிங்க : ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு; எஸ்.பி.ஐ VS ஹெச்.டி.எஃப்.சி.. எதில் பெஸ்ட் ரிட்டன்? சீனியர் சிட்டிசன்கள் நோட் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
டாக்கா, ஜூன் 30 2025: வங்கதேசத்தில் இளம்பெண் வீடு புகுந்து கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் உள்ளூர் அரசியல்வாதி ஃபசூர் அலி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். உள்ளூர் வங்கதேச அரசியல்வாதி ஃபசூர் அலி என்பவரால் இந்துப் பெண் ஒருவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்த மறுநாளே, டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் போராட்டங்களை நடத்தி தலைநகரின் தெருக்களில் திரண்டனர்.
போராட்டங்களில் ஒன்றின் காணொளியில், குற்றவாளிகள் மீது “நேரடி நடவடிக்கை” கோரி மாணவர்கள் கோஷமிட்டனர். இந்து பண்டிகை தினத்தில் கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில் வீடு புகுந்து உள்ளூர் அரசியல்வாதி பெண்ணை கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் வங்கதேசத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்; என்ன நடந்தது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
ஹைதராபாத், ஜூன் 30 2025: பிரபல தெலுங்கு தொலைக்காட்சி தொகுப்பாளினி ஸ்வேட்சா வோடர்கர், ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அதாவது, ஹைதராபாத் சிக்கட்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜவஹர் நகரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (ஜூன் 28 2025) அதிகாலையில் வெளிச்சத்துக்கு வந்தது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஸ்வேட்சா தனது அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இது தற்கொலையாக இருக்கலாம்” என்றார். மேலும், தவறான நடத்தை உள்ளிட்ட பிற சாத்தியக்கூறுகளையும் போலீசார் நிராகரிக்கவில்லை. இதற்கிடையில், சம்பவ இடத்தில் இருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை, இருப்பினும் அவர் மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்படட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க : பூரி ஜெகந்தாத் யாத்திரையில் கூட்ட நெரிசல்; 3 பேர் மரணம்.. 50 பேர் காயம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
சென்னை, ஜூன் 30 2025: சென்னையில் இன்று (திங்கள்கிழமை) 24 காரட் தங்கத்தின் விலை ரூ.9,725 ஆகவும்; ஒரு பவுன் (8 கிராம்) ரூ.77,800 ஆகவும் காணப்படுகின்றது. நேற்று (ஜூன் 29 2025) தங்கத்தின் விலை கிராம் ரூ.9,742 ஆகவும்; ஒரு பவுன் ரூ.77,936 ஆகவும் விற்பனையானது.
ஆபரணத் தங்கம்
22 காரட் ஆபரணத் தங்கத்தை பொறுத்தவரை இன்று கிராம் ரூ.8,915 ஆகவும், ஒரு பவுன் ரூ.71,320 ஆகவும் விற்பனையாகிறது. நேற்று, கிராம் ரூ.8930 ஆகவும், ஒரு பவுன் ரூ.71,440 ஆகவும் காணப்பட்டது. அந்த வகையில் தங்கத்தின் கிராம் ரூ.15 சரிவு, பவுனுக்கு ரூ.120 ஆக சரிந்துள்ளது.
வெள்ளி விலை
வெள்ளியை பொறுத்தமட்டில் கிராம் ரூ.119 ஆக விற்பனையாகி வருகிறது. அந்த வகையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 19 ஆயிரமாக உள்ளது. வெள்ளி கடந்த சில நாள்களுக்கு முன்பு கிராம் ரூ.120 ஆக காணப்பட்டது. அந்த வகையில் தற்போது கிராமுக்கு ரூ.1 சரிந்து விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ‘ராமதாஸ் பதவிகளுக்கு ஆசைப்படாதவர்’; பா.ம.க எம்.எல்.ஏ அருள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com