Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ. 45 குறைந்து விற்பனையாகிறது.
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ. 45 குறைந்து விற்பனையாகிறது.

Published on: October 28, 2024 at 9:50 am
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ. 7,360 ஆகவும், பவுன் ரூ. 58,880 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 45 குறைந்து கிராம் ரூ. 7,315 ஆகவும் பவுன் ரூ. 58,520 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,820 ஆகவும் பவுன் ரூ. 62,560ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை கிராம் ரூ.107 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.107,000 ஆகவும் நேற்றைய விலையிலேயே காணப்படுகின்றது.
இதையும் படிங்க கேரள லாட்டரி வின் வின் W-793; ரூ.75 லட்சம் வெல்லப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?

சென்னை, ஜூலை 31, 2026: பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுடனான சட்டப் போராட்டங்களுக்கு மத்தியில், தனது மகன் ராகா ரங்கராஜுடன் இருக்கும் புகைப்படத்தைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், “என் மகனுக்காக வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக நிற்பேன்” என்று குறிப்பிட்டுள்ள அவர், கடந்த ஆறு மாதங்களாகக் குழந்தைகளுக்கான அனைத்துப் பொறுப்புகளையும் அன்போடும் அர்ப்பணிப்போடும் நிறைவேற்றி வருவதாகவும், இனிவருங் காலங்களிலும் மகனுக்குத் தேவையான அனைத்தையும் தொடர்ந்து செய்து தருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஏற்கனவே திருமணமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை இரண்டாவது திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகக் கூறி, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கிய நிலையில், இது தொடர்பான வழக்கு நீதிமன்ற நிலுவையிலும் இருந்து வருகிறது. இத்தகைய சட்டப் போராட்டங்கள் நடைபெற்று வந்த சூழலில், கர்ப்பத்தின் இறுதி கட்டத்தில் இருந்த ஜாய் கிரிஸில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.
வழக்கு விசாரணையின் போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டிஎன்ஏ (DNA) பரிசோதனையில் குழந்தை ரங்கராஜின் உயிரியல் மகன் என்பது உறுதி செய்யப்பட்டால், அக்குழந்தையின் வாழ்நாள் முழுமைக்குமான பொறுப்பை ஏற்கத் தயார் என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட அறிக்கையில், டிஎன்ஏ பரிசோதனை அறிக்கை மூலம் ராகா ரங்கராஜின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சட்டப் போராட்டங்களின் பின்னணியில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தையும் இந்த விளக்கத்தையும் பதிவிட்டுள்ளது இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், இந்தச் சமூக வலைதளப் பதிவைத் தொடர்ந்து நீதிமன்ற வழக்கிலோ அல்லது சட்ட நடவடிக்கைகளிலோ தற்போதைக்கு வேறு எந்தப் புதிய திருப்பங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மம்முட்டியின் புதிய படம்.. காரைக்குடியில் தொடங்கிய படப்பிடிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

சென்னை, ஜூலை 31, 2026: மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் காரைக்குடியில் இன்று தொடங்கியுள்ளது. இயக்குநர் நிதிஷ் சஹாதேவ் இயக்கும் இந்தப் படத்தை மம்மூட்டி கம்பனி நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இந்தப் படம் தற்காலிகமாக மம்மூட்டி கம்பெனி புரேஷன் எண்9 என்ற பெயரில் குறிப்பிடப்பட்டு வருகிறது.
படப்பிடிப்பு தொடங்கியதை தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது. “காரைக்குடியில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த புதிய பயணத்திற்கு உங்கள் அன்பும் ஆதரவும் தேவை” என்று பதிவிட்டதுடன், முதல் நாள் படப்பிடிப்பின் பின்னணிக் காட்சிகளையும் (BTS) வெளியிட்டுள்ளது.
நடிகர் ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, மம்முட்டியை இயக்க உள்ளதாக நிதிஷ் சஹாதேவ் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இந்தப் படத்தின் திரைக்கதையை அனுராஜ் ஓ.பி. மற்றும் நிதிஷ் சஹாதேவ் இணைந்து எழுதியுள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜிம்ஷி காலித் பணியாற்றுகிறார்.
இப்படம் இரண்டு வாரங்களுக்கு முன்பு பிரம்மாண்ட பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட நிலையில், தற்போது காரைக்குடியில் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாளன்று இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: இரட்டிப்பு மகிழ்ச்சி.. இரட்டை குழந்தைகளுக்கு அப்பாவான நடிகர் கவின்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

தூத்துக்குடி, ஜூலை 31, 2026: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (TNSTC) பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கிய விபத்தில், ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 1 மணியளவில் தூத்துக்குடி–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்றது.
விபத்து குறித்து போலீசார் தெரிவித்ததாவது, திருச்செந்தூரில் இருந்து குமுளி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது விளாத்திகுளம் சாலையிலிருந்து தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற வேன் திடீரென பேருந்தின் முன்பாக வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, வேன் மீது மோதுவதைத் தவிர்க்க பேருந்து ஓட்டுநர் திடீரென வாகனத்தை திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் சில பயணிகள் உட்பட மொத்தம் 10 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 7 சவரன் நகைக்காக 75 வயது மூதாட்டி கொலை… மகனையும் வெட்டிவிட்டு தப்பிய மர்ம நபர்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

சென்னை, ஜூலை 31, 2026: நடிகர் கவின் மற்றும் அவரது மனைவி மோனிகா இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாகியுள்ளனர். ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை கவின் வியாழக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்தார்.
“எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி. எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர்” என்று தமிழில் பதிவிட்டிருந்தார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவின் வெளியிட்ட பதிவுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இரட்டை குழந்தைகளின் வருகை கவின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நான்காம் வகுப்புவரை பிறந்தநாள் கொண்டாடியதில்லை.. நடிகர் தனுஷ் உருக்கம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

பாகு, ஜூலை 31 2026: அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்று வரும் 17 வயதுக்குட்பட்ட உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை நிகிதா செஹ்ராவத் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். நேற்று நடைபெற்ற 57 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில், அமெரிக்காவின் எபெனேசா எலிசன்-இடம் 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தியடைந்தார்.
49 கிலோ எடைப்பிரிவுக்கான வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்திய வீராங்கனை காம்னா பாபல், ரஷ்யாவின் இரினா சைடீவாவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
73 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்தியாவின் கரிமா, ஸ்பெயினின் பவுலா பெனைஷா பெரெஸ்-ஐ தொழில்நுட்ப முன்னிலை (Technical Superiority) அடிப்படையில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் மகளிர் பிரிவில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று சிறப்பான சாதனை படைத்துள்ளது.
இதையும் படிங்க: காமன்வெல்த்.. வெண்கலம் வென்ற தந்தை, வெள்ளி வென்ற மகன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com