Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ. 45 குறைந்து விற்பனையாகிறது.
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ. 45 குறைந்து விற்பனையாகிறது.

Published on: October 28, 2024 at 9:50 am
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ. 7,360 ஆகவும், பவுன் ரூ. 58,880 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 45 குறைந்து கிராம் ரூ. 7,315 ஆகவும் பவுன் ரூ. 58,520 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,820 ஆகவும் பவுன் ரூ. 62,560ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை கிராம் ரூ.107 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.107,000 ஆகவும் நேற்றைய விலையிலேயே காணப்படுகின்றது.
இதையும் படிங்க கேரள லாட்டரி வின் வின் W-793; ரூ.75 லட்சம் வெல்லப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?

அமராவதி, டிச.12, 2025: ஆந்திரா மாநிலத்தின் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் இன்று அதிகாலை (டிச.12, 205) பெரிய விபத்து ஏற்பட்டது. அதாவது, தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சிந்தூர்–மரேடுமில்லி மலைச்சரிவு சாலையில் பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சுமார் 22 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து நேரத்தில் பேருந்தில் மொத்தம் 35 பயணிகள் மற்றும் 2 டிரைவர்கள் இருந்தனர்.
பேருந்து டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால், வாகனம் சாலையிலிருந்து பள்ளத்தாக்கில் விழுந்து கவிழ்ந்தது. இந்த சம்பவம், சிந்தூர்–மரேடுமில்லி மலைச்சரிவு சாலையில் துலசிபாகா கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது நடந்தது. உள்ளூர் மக்கள் மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் சிந்தூர் பகுதி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அதில் தீவிரமாக காயமடைந்த 5 பயணிகள் பத்ராசலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்க அளவு பேர் சித்தூர் மற்றும் திருப்பதி மாவட்டங்களைச் சேர்ந்த யாத்திரிகர்கள் ஆவர். இந்த விபத்து குறித்து, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அமித் பார்டர் கூறுகையில், “விபத்து அதிகாலை சுமார் 4:30 மணியளவில் ஏற்பட்டது” என்றார்.
இதையும் படிங்க : மணிப்பூரில் ஜனாதிபதி திரௌபதி முர்மு.. புதிய திட்டங்கள் தொடக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

புதுடெல்லி, டிச.12, 2025: மணிப்பூர் மாநிலத்தின் செனாபதி மாவட்டத்திற்கு இன்று (டிச.12, 2025) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்றார். அங்கு, செயல்படுத்தப்பட்ட ஆறு அபிவிருத்தித் திட்டங்களை திறந்து வைத்தார். மேலும், மாவட்டத்திற்கான ஐந்து அபிவிருத்தித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
குடியரசுத் தலைவர் திறந்து வைத்த திட்டங்களில், 25 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட மாதிரி குடியிருப்பு பள்ளி, 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட இரண்டு முதன்மை சுகாதார மையங்கள், 11 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இரண்டு பாலங்கள் அடங்கும். திறப்பு மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் பெண்கள் மற்றும் ஆண்கள் விடுதிகள், காவல் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, சுகாதாரம், சமூக மற்றும் பழங்குடியினர், கல்வி உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கியவை ஆகும்.
செனாபதி மாவட்டத் தலைமையகத்தை அடைந்த பிறகு, குடியரசுத் தலைவர் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்திருந்த உள்நாட்டு இடம்பெயர்ந்தவர்களை சந்தித்து உரையாடினார். மேலும், மணிப்பூரில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களை சந்தித்து உரையாடினார்.
இதையும் படிங்க :தெலங்கானாவில் 84.28 சதவீத வாக்குப்பதிவு.. கிராம பஞ்சாயத்து தேர்தலில் குவிந்த வாக்காளர்கள்!
பின்னர், செனாபதி மாவட்டத்தில் உள்ள பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திட்டங்களை தொடங்கிவைத்தார். அப்போது அங்கிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பி.எம் ஜன்மான் (PM JANMAN) திட்டத்தின் கீழ் பழங்குடியினர் சமூகத்தை, குறிப்பாக அடிமட்டத்தில் இருக்கும் நபர்களை உயர்த்துவதற்கான பல்வேறு முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இது அவர்களின் வாழ்க்கையை மேலும் மேம்படுத்தும் என்று கூறினார். மணிப்பூர் பழங்குடியினரின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும். மேலும், நாட்டின் முன்னேற்றத்தில் அவர்களின் அதிக பங்கேற்பை உறுதி செய்வதும் தேசிய முன்னுரிமைகளாகும் என்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.
இதையும் படிங்க : கடந்த 10 ஆண்டுகளில் பயிர் உற்பத்தி 44 சதவீதம் அதிகரிப்பு.. சிவராஜ் சிங் சௌகான்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

ஹைதராபாத், டிச.12, 2025: தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் 4,236 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 37,440 வார்டுகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 395 கிராம பஞ்சாயத்து மற்றும் 9,331 வார்டு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் விளைவாக 3,800க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகள் மற்றும் 27,960 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில், ஆட்சியில் உள்ள காங்கிரஸ் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் அதிகளவில் வெற்றிப் பெற்றுள்ளனர். போட்டியிட்ட கிராமங்களில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றனர். எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ் சுமார் 800 கிராமங்களில் வெற்றி பெற்றது. பாஜக சுமார் 150 கிராமங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இந்த மாதம் 14ஆம் தேதி நடைபெறும்; மூன்றாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இந்த மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஜோர்டான் முதல் ஓமன் வரை.. பிரதமர் 4 நாள் பயணம்.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

புதுடெல்லி, டிச.12, 2025: பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதம் 15ஆம் தேதி முதல் நான்கு நாள் பயணமாக ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு செல்ல உள்ளார். அவரது பயணத்தின் முதல் கட்டமாக, டிச.15ஆம் தேதி ஜோர்டான் மன்னர் அப்துல்லா II பின் அல் ஹுசைனை சந்திக்கிறார். முன்னதாக, ஜோர்டான் மன்னர் அப்துல்லா II பின் அல் ஹுசைன் தங்கள் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி வர வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.
இந்தியா-ஜோர்டான் 75 ஆண்டுகால உறவு
அதன்படி, இந்தியா–ஜோர்டான் உறவுகள் முழுமையாக பரிசீலிக்கப்படுவதோடு, பிராந்திய பிரச்சினைகள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொள்ள மன்னர் அப்துல்லா II அவர்களை சந்திக்கிறார். இந்தியாவுக்கும் ஜோர்டானுக்கும் இடையே தூதரக உறவுகள் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த பயணம் இரு நாடுகளின் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பரஸ்பர வளர்ச்சி மற்றும் செழிப்பிற்கான புதிய வாய்ப்புகளை ஆராயவும், பிராந்திய அமைதி, செழிப்பு, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தவும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.
இதையும் படிங்க : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. டெல்லி காற்று மாசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!
எத்தியோப்பியா முதல் பயணம்
இதைத் தொடர்ந்து, டிசம்பர் 16ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி எத்தியோப்பியா நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். இது அவரின் அந்த நாட்டிற்கான முதல் பயணமாகும். எத்தியோப்பியா பிரதமர் டாக்டர் அபி அஹ்மத் அலி அவர்களின் அழைப்பின் பேரிலேயே இந்த பயணம் நடைபெறுகிறது. அங்கு தங்கியிருக்கும் காலத்தில், இந்தியா–எத்தியோப்பியா இருதரப்பு உறவுகள் குறித்த அனைத்து அம்சங்களிலும் டாக்டர் அலி அவர்களுடன் விரிவான கலந்துரையாடல்கள் நடைபெறும்.
மேலும், ‘குளோபல் சவுத்’ நாடுகளின் பங்காளிகளாக, இந்த பயணம் இரு நாடுகளின் நட்பு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. பயணத்தின் இறுதி கட்டமாக, டிசம்பர் 17ஆம் தேதி முதல், மோடி அவர்கள் ஓமான் நாட்டிற்கு செல்கிறார். ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்களின் அழைப்பின் பேரிலேயே இந்த பயணம் நடைபெறுகிறது.
இரண்டாவது முறையாக ஓமன் பயணம்
மேலும், இது பிரதமர் நரேந்திர மோடியின் ஓமன் நாட்டிற்கான இரண்டாவது பயணமாகும். இந்தியா–ஓமான் நாடுகள் நூற்றாண்டுகளாக நிலைத்து வரும் நட்பு, வர்த்தக தொடர்புகள் மற்றும் மக்களிடைய உறவுகளை அடிப்படையாகக் கொண்ட விரிவான மூலோபாய கூட்டாண்மையைப் பகிர்ந்து வருகின்றன. இந்த பயணம், இரு நாடுகளுக்கிடையே தூதரக உறவுகள் நிறுவப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கிறது.
இதையும் படிங்க : கடந்த 10 ஆண்டுகளில் பயிர் உற்பத்தி 44 சதவீதம் அதிகரிப்பு.. சிவராஜ் சிங் சௌகான்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

புதுடெல்லி,டிச.12, 2025: மாநிலங்களவை கேள்வி நேரத்தில் கூடுதல் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், “கடந்த 10 ஆண்டுகளில் பயிர் உற்பத்தி 44 சதவீதம் அதிகரித்துள்ளது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “2014 முதல் 2024 வரை புதிய விதை வகைகள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட விவசாய முறைகள் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக இது சாத்தியமாகியுள்ளது. வேளாண்மை துறையின் முழுமையான முன்னேற்றத்தை உறுதி செய்ய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்றார்.
மேலும், “விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதிலும், வேளாண்மையின் மொத்த வளர்ச்சியை முன்னேற்றுவதிலும் மோடி அரசு கவனம் செலுத்தி வருகிறது” என்றார்.
ரூ.4 லட்சம் கோடி…
இதையடுத்து, “அரசு விவசாயிகளுக்கு இரண்டு இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உர உதவித்தொகையை வழங்கி வருகிறது. பிரதம மந்திரி கிசான் சன்மான் நிதி திட்டத்தின் கீழ் நான்கு இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், பிரதம மந்திரி பாசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ், ஒரு இலட்சத்து தொண்ணூறு ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு விவசாயிகளின் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது” என்றும் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார்.
இதையும் படிங்க : 91வது வயதில் மரணம்.. யார் இந்த சிவ்ராஜ் பாட்டீல்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com