
தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் என்ற ஊரில் பிறந்து தமிழ் மற்றும் வடமொழியில் புலமை பெற்று விளங்கியவர் பாம்பன் சுவாமிகள். இவர் முருகனை வழிபட்டு வந்த ஒரு தமிழ் துறவி ஆவார். இவர் முருகனை நினைத்து 6666 பாடல்கள் இயற்றியுள்ளார். இவர் இயற்றிய சண்முக கவசம் மிகவும் புகழ்பெற்றது.













