பால்கனியில் கஞ்சா செடி வளர்த்த, காதல் ஜோடியை கொத்தாக தூக்கி உள்ளனர் பெங்களூரு போலீஸ்.
பால்கனியில் கஞ்சா செடி வளர்த்த, காதல் ஜோடியை கொத்தாக தூக்கி உள்ளனர் பெங்களூரு போலீஸ்.
Published on: November 15, 2024 at 12:30 pm
Updated on: November 15, 2024 at 2:18 pm
Bengaluru | கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எம் எஸ் ஆர் நகரில் வசித்து வரும் தம்பதியர் சாகர் குருங் (37), ஊர்மிளா குமாரி (38). சாகர் தெரிய உணவகம் ஒன்றை நடத்தி வரும் நிலையில், குமாரி இல்லத்தரசியாக உள்ளார்.
இந்த நிலையில் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி பேஸ்புக்கில் இந்த தம்பதியர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில் எங்கள் வீட்டில் மாடி தோட்டத்தை பாருங்கள். எவ்வளவு அழகாக உள்ளது.
எங்களிடம் பல்வேறு மூலிகை செடிகளும் உள்ளன எனக் கூறியுள்ளனர். இதைப் பார்த்த நெட்டிசன்களின் சிலர் அடடே இது கஞ்சா செடி ஆச்சே.. கஞ்சா என்ன விலை? என்றெல்லாம் கலாய்த்து எழுதி தள்ளி உள்ளனர். இதற்கிடையில் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சாகர் மற்றும் ஊர்மிளா தம்பதியை கைது செய்தனர். மேலும் வீட்டிலிருந்து 54 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 17 பூந்தொட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான தம்பதியர் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. பெங்களூருவில் குடியிருப்ப பகுதியில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க குளிர்பானத்தில் போதை மருந்து: நீட் மாணவி பாலியல் வன்புணர்வு; 2 ஆசிரியர்கள் கைது
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com