Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ. 45 குறைந்து விற்பனையாகிறது.
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ. 45 குறைந்து விற்பனையாகிறது.

Published on: October 28, 2024 at 9:50 am
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ. 7,360 ஆகவும், பவுன் ரூ. 58,880 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 45 குறைந்து கிராம் ரூ. 7,315 ஆகவும் பவுன் ரூ. 58,520 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,820 ஆகவும் பவுன் ரூ. 62,560ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை கிராம் ரூ.107 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.107,000 ஆகவும் நேற்றைய விலையிலேயே காணப்படுகின்றது.
இதையும் படிங்க கேரள லாட்டரி வின் வின் W-793; ரூ.75 லட்சம் வெல்லப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?

சென்னை, மார்ச் 10, 2026: தங்கம் விலை கடந்த சில தினங்களாக குறைந்துகொண்டே வந்த நிலையில், மீண்டும் உயரத் துவங்கி உள்ளது.
இன்றைய தங்கம் விலை
தங்கம் விலை இன்று கிராமுக்கு ₹ 100 உயர்ந்து சவரனுக்கு ₹ 800 உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூபாய் 15 ஆயிரத்து 050க்கும், எட்டு கிராம் கொண்ட ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹ 120,400 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 16 ஆயிரத்து 418க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 344 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தமட்டில் ஒரு கிலோ தங்கம் நேற்று 2 லட்சத்து 90 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று பத்தாயிரம் உயர்ந்து மூன்று லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 300 ஆக உள்ளது.
இதையும் படிங்க: பெண்கள் அதிகாரமளிப்பு.. 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன்கள்.. எஸ்.பி.ஐ அறிமுகம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

புதுடெல்லி, மார்ச் 10, 2026: யூ.பி.எஸ்.சி (UPSC) 2026ஆம் ஆண்டில் எத்தனை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் காலியிடங்கள் உள்ளன? பிரிவு வாரியான விவரங்களை பார்க்கலாம்.
யூ.பி.எஸ்.சி 2026 தேர்வில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எஃப்.எஸ் மற்றும் பிற சேவைகளுக்காக மொத்தம் 933 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், இந்திய நிர்வாக சேவைக்கு (IAS) மட்டும் 180 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பிரிவு வாரியான (Category-wise) மற்றும் PwBD (Persons with Benchmark Disabilities) ஒதுக்கீடுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
| வ.எண் | சேவை | மொத்த காலியிடங்கள் |
|---|---|---|
| 01 | ஐ.ஏ.எஸ் (இந்திய நிர்வாக சேவை) | 180 |
| 02 | ஐ.பி.எஸ் (இந்திய காவல் சேவை) | 150 |
| 03 | ஐ.எஃப்.எஸ் இந்திய வெளிநாட்டு சேவை | 40 |
| 04 | ஐ.ஆர்.எஸ் இந்திய வருவாய் சேவை | 300 |
| 05 | மற்ற க்ரூப் ஏ மற்றும் பி சேவைகள் | 263 |
| மொத்தம் | 933 |
யூ.பி.எஸ்.சி 2026 முக்கிய தேதிகள்
முன்தேர்வு (Preliminary Exam): மே 24, 2026
விண்ணப்பம் மூடும் தேதி (Application Window Closed): பிப்ரவரி 27, 2026
அறிவிப்பு வெளியான தேதி (Notification Released): பிப்ரவரி 4, 2026
பிரிவு வாரியான ஒதுக்கீடு
பொது பிரிவு (General Category): ~400 இடங்கள்
ஒபிசி (OBC): 250 இடங்கள்
எஸ்சி (SC): 140 இடங்கள்
எஸ்டி (ST): 70 இடங்கள்
மாற்றுத்திறனாளி : 30 இடங்கள் (அனைத்து சேவைகளிலும் ஒதுக்கீடு)
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), சிவில் சர்வீசஸ் தேர்வு (CSE) 2026க்கான சேவை வாரியான காலியிட விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தேர்வர்களுக்கு நீண்டநாள் எதிர்பார்த்த தெளிவு கிடைத்துள்ளது. இந்த எண்ணிக்கைகள், பணியாளர் மற்றும் பயனாளர் குறைகள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பணியாளர் பயிற்சி மற்றும் நிர்வாகத் துறை கீழ் பகிரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கனடாவில் உயர் கல்வி.. 100 மில்லியன் டாலர் நிதியுதவி.. இந்தத் திட்டம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

சென்னை, மார்ச் 10 2026:சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பாக போட்டியிட விரும்புபவர்களிடம் அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று நேர்காணல் நடத்த உள்ளார்.
4200 க்கும் மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கட்சி தலைமையகத்துக்கு வந்துள்ள நிலையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜய் என்று நேர்காணல் நடத்துகிறார். இன்று காலை 10:30 மணிக்கு நேர்காணல் தொடங்க உள்ளது. நேரடியாகவும் ஆன்லைன் வழியாகவும் நேர்காணல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன விஜயுடன் கட்சியின் பொதுச்செயலாளர் புசிய ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகளும் இணைந்து நேர்காணல் நடத்த உள்ளனர்.
கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் இன்று டெல்லியில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில் கட்சிப் பணிகள் காரணமாக சிபிஐ அலுவலகம் வர இயலவில்லை என விளக்கம் அளித்து விஜய் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காத்திருந்து தாக்கிய கும்பல்.. இலங்கை முகாம் தலைவர் கொலை.. பெண்கள் உள்பட 6 பேர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

சென்னை, மார்ச் 10, 2026: வாட்ஸ்அப் செயலி நிறுவனம், வாட்ஸ்அப் ப்ளஸ் எனப்படும் புதிய பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், பயனர்கள் மெசேஜிங் பிளாட்ஃபார்மைப் பயன்படுத்துவதற்காக கட்டணம் செலுத்த வேண்டிய அம்சங்கள் குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, இந்த செய்தி இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்திருந்தாலும், தற்போது, வாபீட்டாஇன்ஃபோ எனும் டிப்ஸ்டர், கட்டண அடிப்படையில் வழங்கப்படவுள்ள அம்சங்கள் மற்றும் வாட்ஸ்அப்பின் புதிய வடிவத்தில் பயனர்கள் எதிர்பார்க்கக்கூடியவற்றை பகிர்ந்துள்ளார்.
இந்த மெசேஜிங் ஆப், வாட்ஸ்அப் ப்ரொஃபைல்களை தனிப்பயனாக்கும் புதிய வழிகள், அரட்டைகளுடன் தொடர்புடைய சில அம்சங்கள் மற்றும் வாட்ஸ்அப் அழைப்புகளுக்கான கூடுதல் வசதிகளைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், மேட்டா, தனது பயன்பாடுகளில் பயனர்களை வருமானமாக்கும் நோக்கில் பல்வேறு மாதிரிகளை சோதித்து வருகிறது. செயற்கை தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஆழமாகச் செல்லும் நிலையில், பிரீமியம் பதிப்புகளுக்கான வாய்ப்புகள் மேலும் விரிவடைந்துள்ளன. முன்னதாக, இன்ஸ்டாகிராம் பயனர்களுக்காக, ‘உங்களை பின்தொடராதவர்களை காணும் வசதி’ அல்லது ‘ஒருவரின் ஸ்டோரி பார்த்தாலும், அவர் அதை அறியாமல் இருப்பது’ போன்ற அம்சங்களை மேட்டா வழங்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மெசேஜை மறைத்து அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

சென்னை, மார்ச் 10, 2026: முடக்கத்தான் கீரையை பயன்படுத்தி உடலுக்கு வலிமை தரும் ஆரோக்கியமான தோசை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
முடக்கத்தான் கீரை – 2 கப்
புழுங்கல் அரிசி – 1 கப்
உளுந்து -1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரிசி, உளுந்து, வெந்தயம், துவரம் பருப்பு ஆகியவற்றை நன்கு கழுவி ஒன்றாக சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் இதனை கிரைண்டரில் போட்டு அரைத்து எடுக்கவும். மாவு அரைக்கும் போது இரண்டு மூன்று முறை தண்ணீரில் சுத்தம் செய்த முடக்கத்தான் கீரையையும் சேர்த்து நைசாக அரைக்கவும்.
நன்கு அரைத்த பின்னர் வேறு பாத்திரத்தில் மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து அதன் பிறகு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்து வைக்கவும். இதனை 7 மணிநேரம் புளிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது தோசை தவாவில் ஒரு கரண்டி மாவு ஊற்றி இரண்டு 2 பக்கமும் சிறிது எண்ணெய் ஊற்றி எடுத்தால் ஆரோக்கியமான முடக்கத்தான் கீரை தோசை ரெடி..
இதையும் படிங்க: காரசாரமான கருவாட்டு குழம்பு.. இப்படி ட்ரை பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com