How to make saiva curry kulambu | மட்டன் சுவையில் சைவ கறி குழம்பு இப்படி செய்து பாருங்க.
How to make saiva curry kulambu | மட்டன் சுவையில் சைவ கறி குழம்பு இப்படி செய்து பாருங்க.
Published on: October 19, 2024 at 12:39 pm
How to make saiva curry kulambu | அதிகமாக அசைவம் சாப்பிடுவதால் வெயிட் போடும் என்று நினைப்பவர்களுக்கு அசைவ சுவையிலேயே சைவ கறி குழம்பு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
சோம்பு -1/2 ஸ்பூன்
சீரகம்-1/2 ஸ்பூன்
பிரிஞ்சி இலை- 1
பட்டை – 1
லவங்கம்-1
ஏலக்காய் -2
கிராம்பு-2
பெரிய வெங்காயம் -1
பச்சை மிளகாய் -1
தக்காளி-1
கொத்தமல்லி இலை- சிறிதளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
சீரகத்தூள் -1/4 ஸ்பூன்
தனியா தூள் -1/2 ஸ்பூன்
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்
மாவு துண்டுகள் தயாரிக்க தேவையானவை
கடலை மாவு -250 கிராம்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன்
சீரகத்தூள் – 1/4 ஸ்பூன் கரம் மசாலா – 1/4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் -2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது -1/4 ஸ்பூன்
தண்ணீர் -தேவையான அளவு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் சோம்பு, சீரகம், பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து வறுக்க வேண்டும். இவை பொறிந்ததும் இதனுடன் சிறிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கி பொன்னிறமாக மாறியதும் இதனுடன் நறுக்கிய தக்காளி மற்றும் சிறிது கொத்தமல்லி இலை சேர்க்க வேண்டும்.
இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்க வேண்டும். பின்னர் அடுப்புத்தீயை லோ பிளேமில் வைத்து இதனுடன் மஞ்சள் தூள், சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மிளகாய் தூள் சோ்த்து வதக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தொக்கு பதம் வரும் வரை நன்கு வதக்க வேண்டும். பின்னர் குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐந்து முதல் ஏழு நிமிடம் வரை மூடி போட்டு வேக விட வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள் மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். பின்னர் இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பக்கோடா பதத்தில் தயார் செய்ய வேண்டும். தயார் செய்து வைத்து துண்டுகளை எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.
பொரித்து எடுத்த இந்த துண்டுகளை குழம்பில் சேர்க்க வேண்டும். பொரித்த துண்டுகளை சேர்த்த பிறகு அதிக நேரம் வேகவிட்டால் துண்டுகள் உடைந்து விடும். எனவே இரண்டு நிமிடம் வேகவைத்து இறக்கவும். இப்பொழுது மட்டன் சுவையில் சைவ கறி குழம்பு தயார்.
இதையும் படிங்க : குழந்தைங்க டிபன் பாக்ஸ் கன்ஃபார்ம் காலி: தேங்காய்ப்பால் ரசம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com