Chennai | டெல்லி-சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பெண்ணை சக பயணி சில்மிஷம் செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர், 45 வயதான ராஜேஷ் சர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், மார்பிள் டைல் லேயர் தொழில் செய்துவருகிறார்.
மேலும், இவர் அக். 9-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் அவர் கைது செய்யப்பட்டார் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஜெய்ப்பூர் மற்றும் டெல்லிக்கு பயணம் செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த சர்மா, பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரி, “அவளுக்குப் பின்னால் அமர்ந்திருந்த குற்றம் சாட்டப்பட்டவர், விமானத்தின் போது தகாத முறையில் அவளைத் தொட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது” என்றார். மேலும், உள்ளூர் போலீசார் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க பெண்ணுக்கு உதவியதை அடுத்து, விசாரணை நடந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : திருநெல்வேலியில் 4 பேர் மீது குண்டாஸ்: வழக்கு என்ன?
Australian Girl Killed in Pakistan: பாகிஸ்தானில் விடுமுறைக்கு சென்ற ஆஸ்திரேலிய சிறுமி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது….
Karur College Student Murder Case : கரூரில் 2016ஆம் ஆண்டு கல்லூரி மாணவி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நீதிமன்றம்…
Mayiladuthurai: மயிலாடுதுறையில் சவ ஊர்வலத்தை கடக்க முயன்ற காரை, போதையில் இருந்த 50க்கும் மேற்பட்டோர் மறித்து தாக்கியதில் 80 வயது மூதாட்டி உட்பட 5 பேர் காயமடைந்தனர்….
Christian preacher arrested in Tuticorin : கிறிஸ்தவ தேவாலயம் வந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் அதிரடியாக கைது செய்யப்பட்டார்….
Fake doctors arrested: திருப்பத்தூரில் போலி மருத்துவர்கள் இருவர்கள் கைது செய்யப்பட்டனர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்