Dr Ramadoss | பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை கதீட்ரல் சாலையில் தனியாரிடமிருந்து மீட்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிலத்தில் வெளிநாடுகளுக்கு இணையான அம்சங்களுடம் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால், அதற்கான கட்டணம் ஏழை மக்களால் செலுத்த முடியாத அளவுக்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது சரியல்ல.
நுழைவுக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது 3 மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பூங்காவில் உள்ள பிற வசதிகளை பார்வையிட தனித்தனிக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள ரூ.250, பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டு பறவைகளை பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திட ரூ.150, இசை நீருற்றின் கண்கவர் நடனத்தை காண ரூ.50, கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட ரூ.50, குழந்தைகள் சவாரி விளையாட்டுக்கு ரூ.50 என ஒருவர் பூங்காவின் அனைத்து அம்சங்களையும் அனுபவிக்க ரூ.650 செலுத்த வேண்டும். இது மிக அதிகம்.
செம்மொழிப் பூங்காவுக்கு இணையாக கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவின் நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். பூங்காவில் உள்ள அனைத்து அம்சங்களையும் அனுபவிக்க மொத்தமாக குறைந்த கட்டணத்தை நிர்ணயிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
அப்போது தான் பூங்கா உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். இல்லாவிட்டால் இது பணக்காரர்களுக்கான பூங்காவாகவே பார்க்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : பழனி ரோப் கார்; அடுத்த 40 நாட்கள்: வெளியான முக்கிய அறிவிப்பு
Subhash Chandra insolvency: சுபாஷ் சந்திராவின் ரூ.6.25 கோடி தீர்வு திட்டம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) முன் கடனாளர்களின் வாக்கெடுப்பில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது….
Amitabh Bachchan on Nepal Floods : நேபாள நாட்டின் வெள்ள காட்சிகளை பார்க்க முடியவில்லை; கடும் வேதனையை கொடுக்கின்றன என ஹாலிவுட் நட்சத்திரம் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்….
Naveen Patnaik vs Mining Law : மத்திய அரசு கொண்டுவந்துள்ள கனிமவள திருத்த சட்டம் ஒடிசா மாநிலத்தில் ஆண்டுக்கு ரூபாய் 12000 கோடி வரையிலான வருவாய்…
Pink Ribbon Global Launch : புதுடெல்லியில் உள்ள இந்திய கான்ஸ்டிடியூஷன் கிளப்பில், இந்தியா டர்ன்ஸ் பிங்க் மற்றும் பிங்க் ரிப்பன் இன்டர்நேஷனல் இணைந்து “பிங்க்…
Vijay vs Rahul: PM Race? : யார் வேண்டுமானாலும் பிரதமர் பதவிக்கு ஆசைப்படலாம் ஆனால் 2029ல் ராகுல் காந்தி பிரதமராக வருவார் என காங்கிரஸ் கட்சியின்…
Tirunelveli Halwa Price Hiked : திருநெல்வேலி அல்வா கிலோ ரூபாய் 20 உயர்த்தப்பட்டுள்ளது; இந்த நிலையில் புதிய விலை குறித்து பார்க்கலாம்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்