Japan | ஜப்பானிய விமான நிலையத்தில் புதையுண்டு கிடந்த இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காத அமெரிக்க வெடிகுண்டு புதன்கிழமை (செப்.2,2024) வெடித்தது.
இதனால், ஒரு ஓடுபாதையில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. தொடர்ந்து, 80 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்று ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்மேற்கு ஜப்பானில் உள்ள மியாசாகி விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும், “குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தின் அருகில் விமானம் எதுவும் இல்லை” என்று நிலம் மற்றும் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்காப்புப் படைகள் மற்றும் காவல்துறையினரின் விசாரணையில், 500 பவுண்டுகள் எடையுள்ள அமெரிக்க வெடிகுண்டினால் வெடிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
மேலும் இதில் ஆபத்தும் இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டது. அதன் திடீர் வெடிப்புக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில், ஜப்பானிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோக்கள், டாக்ஸிவேயில் சுமார் 7 மீட்டர் (கெஜம்) விட்டமும் 1 மீட்டர் (3 அடி) ஆழமும் கொண்ட ஒரு பள்ளத்தைக் காட்டியது.
இது குறித்து, தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிமாசா ஹயாஷி கூறுகையில், “புதன்கிழமை நண்பகல் நிலவரப்படி விமான நிலையத்தில் 80க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டாக்சிவே சேதம் இரவோடு இரவாக சரி செய்யப்பட்டு, வியாழன் காலை விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டன” என்றார். மியாசாகி விமான நிலையம் 1943 இல் முன்னாள் இம்பீரியல் ஜப்பானிய கடற்படை விமானப் பயிற்சித் துறையாகக் கட்டப்பட்டது.
இது கடந்த காலத்தில் மிகப்பெரிய போர் விமான இடமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க ராணுவத்தால் வீசப்பட்ட வெடிக்காத பல குண்டுகள் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போரினால் வெடிக்காத நூற்றுக்கணக்கான டன் குண்டுகள் ஜப்பானைச் சுற்றி புதைந்து கிடக்கின்றன, சில சமயங்களில் அவை கட்டுமானத் தளங்களின்போது தென்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
PMK MLA Meeting : பா.ம.க. எம்.எல்.ஏ அருள் வியாழக்கிழமை (ஜூலை 16, 2026) காலை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்….
Meghamalai Issue : மேகமலை கிராம மக்கள் விவகாரம் தொடர்பாக, முதல்வர் விஜய் உடன் பெ. சண்முகம் சந்தித்துப் பேசினார்….
Bay Low Forms : வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது; இதனால் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது….
Ancient Finds in Tenkasi : தென்காசியில் நடந்த தொல்லியியல் ஆய்வில் பழங்கால பொருள்கள் சிக்கின….
L Murugan On Kamaraj : தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிகோலியவர் காமராஜர் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்….
Kamal Haasan On Kamaraj : காமராஜர் என்றும் அரசியல், நிர்வாகி முன்னோடியாக நிலைப்பார் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்….
Hormuz Attack: ஹோர்முஸ் நீரிணையில் UAE-க்கு சொந்தமான இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது நடந்ததாகக் கூறப்படும் ஈரானிய ஏவுகணை தாக்குதலில் ஒரு இந்திய கடற்படை ஊழியர்…
UNSC 2028 : 2028-29 காலகட்டத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிக்கான இந்தியாவின் தேர்தல் பிரசாரத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் நியூயார்க்…
Hormuz Strait : குவைத், ஜோர்டான், பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது; இது வளைகுடா நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது….
Bangkok pub fire Accident : தாய்லாந்தில் உள்ள இரவு மதுக்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன….
Toronto Shooting : கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற வீதி திருவிழாவின் போது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்