Japan | ஜப்பானிய விமான நிலையத்தில் புதையுண்டு கிடந்த இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காத அமெரிக்க வெடிகுண்டு புதன்கிழமை (செப்.2,2024) வெடித்தது.
இதனால், ஒரு ஓடுபாதையில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. தொடர்ந்து, 80 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்று ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்மேற்கு ஜப்பானில் உள்ள மியாசாகி விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும், “குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தின் அருகில் விமானம் எதுவும் இல்லை” என்று நிலம் மற்றும் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்காப்புப் படைகள் மற்றும் காவல்துறையினரின் விசாரணையில், 500 பவுண்டுகள் எடையுள்ள அமெரிக்க வெடிகுண்டினால் வெடிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
மேலும் இதில் ஆபத்தும் இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டது. அதன் திடீர் வெடிப்புக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில், ஜப்பானிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோக்கள், டாக்ஸிவேயில் சுமார் 7 மீட்டர் (கெஜம்) விட்டமும் 1 மீட்டர் (3 அடி) ஆழமும் கொண்ட ஒரு பள்ளத்தைக் காட்டியது.
இது குறித்து, தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிமாசா ஹயாஷி கூறுகையில், “புதன்கிழமை நண்பகல் நிலவரப்படி விமான நிலையத்தில் 80க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டாக்சிவே சேதம் இரவோடு இரவாக சரி செய்யப்பட்டு, வியாழன் காலை விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டன” என்றார். மியாசாகி விமான நிலையம் 1943 இல் முன்னாள் இம்பீரியல் ஜப்பானிய கடற்படை விமானப் பயிற்சித் துறையாகக் கட்டப்பட்டது.
இது கடந்த காலத்தில் மிகப்பெரிய போர் விமான இடமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க ராணுவத்தால் வீசப்பட்ட வெடிக்காத பல குண்டுகள் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போரினால் வெடிக்காத நூற்றுக்கணக்கான டன் குண்டுகள் ஜப்பானைச் சுற்றி புதைந்து கிடக்கின்றன, சில சமயங்களில் அவை கட்டுமானத் தளங்களின்போது தென்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Assembly Election 2026: திமுக கூட்டணியில் காங்கிரஸ் 33 சட்டமன்ற தொகுதிகளை எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன….
Pakistan: காமேனி கொல்லப்பட்டதை கண்டித்து பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது….
PV Sindhu: துபாயில் விமான நிலையத்திற்கு அருகில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுவதாக பி.வி. சிந்து கூறியுள்ளார்….
Nagpur: நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்….
Israeli airstrike on Iran: பழிவாங்குவதாக நினைத்து அமெரிக்கா மீது இஸ்ரேல் மீதோ பதில் தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரானுக்கு அமெரிக்க அதிபர்…
MK Stalin Birthday: தமிழும் தமிழ்நாடு நம் உயிர் என தெரிவித்துள்ள மு.க ஸ்டாலின் உழைப்பை தவிர வேறொன்றும் அறியேன் என தனது பிறந்த நாளில் ட்விட்டர்…
Pakistan: காமேனி கொல்லப்பட்டதை கண்டித்து பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது….
Israeli airstrike on Iran: பழிவாங்குவதாக நினைத்து அமெரிக்கா மீது இஸ்ரேல் மீதோ பதில் தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரானுக்கு அமெரிக்க அதிபர்…
Israeli airstrike on Iran: ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 51 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்….
Israeli airstrike on Iran: ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் ஈரான் இஸ்ரேல் இடையே உச்சகட்ட போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது….
America: ரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணு பேச்சுவார்த்தைகள் இன்று ஜெனீவாவில் மீண்டும் தொடங்க உள்ளன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்