Seafood exports: 2025-26ஆம் ஆண்டில் இந்தியா 19 லட்சம் மெட்ரிக் டன் கடல் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்து, 73,890 கோடி ரூபாய் மதிப்பை எட்டியுள்ளது.
Seafood exports: 2025-26ஆம் ஆண்டில் இந்தியா 19 லட்சம் மெட்ரிக் டன் கடல் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்து, 73,890 கோடி ரூபாய் மதிப்பை எட்டியுள்ளது.

Published on: June 2, 2026 at 12:56 pm
புதுடெல்லி, ஜுன் 2 2026: 2025-26 நிதியாண்டில் இந்தியா 19 லட்சம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான கடல் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்து, ரூ.73,890 கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது. உலகளாவிய சந்தை சவால்களை மீறியும் இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது என்று கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத் தலைவர் பி. ஜவஹர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து MPEDA தலைவர் பி. ஜவஹர் கூறுகையில், உலகளாவிய சந்தையில் பல்வேறு சவால்கள் நிலவிய போதிலும், ஏற்றுமதி அளவிலும் வருவாய் மதிப்பிலும் இது இதுவரை இல்லாத உச்ச சாதனையாகும் என்றார்.
முக்கிய இறக்குமதி நாடுகள்
இந்தியாவின் கடல் உணவுகளுக்கான முக்கிய சந்தைகளாக அமெரிக்கா மற்றும் சீனா தொடர்ந்து முன்னிலையில் உள்ளன. இந்நாடுகள் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளன.
முன்னணி ஏற்றுமதி பொருட்கள்
உறைபடுத்தப்பட்ட இறால் 49,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட வருவாயை ஈட்டி முன்னணி ஏற்றுமதி பொருளாகத் திகழ்கிறது. அதனைத் தொடர்ந்து உறைபடுத்தப்பட்ட மீன் 5,658 கோடி ரூபாய் வருவாயை ஈட்டி இரண்டாவது பெரிய ஏற்றுமதி பொருளாக உள்ளது. கடல் உணவு ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சி, இந்தியாவின் மீன்வளத் துறை மற்றும் ஏற்றுமதி சந்தையின் வலிமையை வெளிப்படுத்துவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் சரிவு.. தற்போதைய நிலவரம் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com