Praggnanandhaa : நார்வே செஸ் போட்டியின் மூன்றாவது சுற்றில் ஆர். பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்ல்சனைத் தோற்கடித்தார்.
Praggnanandhaa : நார்வே செஸ் போட்டியின் மூன்றாவது சுற்றில் ஆர். பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்ல்சனைத் தோற்கடித்தார்.

Published on: May 29, 2026 at 8:33 pm
நார்வே, மே 29, 2026: நார்வே சதுரங்க போட்டியின் மூன்றாவது சுற்றில் இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, உலக நம்பர் 1 வீரர் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி 3 முழு புள்ளிகளை பெற்றார். இந்த வெற்றி அவரை 4.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு உயர்த்தியது.
இந்நிலையில், உலகின் முன்னணி வீரரை வீழ்த்தியதால், இது அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில், பிரக்ஞானந்தா 4.5 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். அலிரெசா ஃபிரூஜா 7.5 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறார்.
மற்றொரு தமிழக வீரர் டி. குகேஷ் 3.5 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார். முன்னதாக, டி. குகேஷ் அலிரெசா ஃபிரூஜாவிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஈட்டி எறிதலில் புதிய சாதனை.. சுமித் அந்தில் அபாரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com