புதுச்சேரி, அக்.3, 2025: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17ஆம் தேதி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார்கள். அவருக்கு உலக தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களால் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது.
இந்த மணல் சிற்பத்தை மாநில முதலமைச்சர் என். ரங்கசாமி மற்றும் துணை நிலை ஆளுநர் குனியில் கைலாஷ்நாதன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த மணல் சிற்பம், பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களால் புதுச்சேரி செயலகத்திற்கு எதிரே உள்ள கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ளது.
(நன்றி ஏ.என்.ஐ)
அதில் பிரதமர் மோடி, புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோரின் முகங்கள் வடிவமைக்கப்பட்டன. மேலும், சிறந்த புதுச்சேரி – வளர்ந்த இந்தியா 2047 என்ற வாசகங்களும் சிற்பத்தில் இடம்பெற்று உள்ளன.
இதையும் படிங்க : சந்தேகமே இல்லை.. ஆபத்தில் ஜனநாயகம்.. உத்தவ் சிவசேனா!
Telangana Lawyer’s Murder : தெலங்கானாவில் வழக்கறிஞர் கொலை வழக்கில், மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்….
Forest Fires in Rajouri : ஜம்மு காஷ்மீரின் ராஜௌரி மாவட்ட காட்டில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது….
Flight suspension to Israel : ஏர் இந்தியா நிறுவனம் இஸ்ரேலுக்கான தனது விமான சேவைகள் இடைநிறுத்தத்தை ஜூலை 31 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது….
New Karnataka CM : கர்நாடகா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக டி.கே சிவக்குமார் தேர்வாகியுள்ளார் என அமைச்சர் ஹெச்.கே பாட்டீல் கூறினார்….
Delhi Heat Wave: டெல்லியில் வெப்ப அலைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….
Siddaramaiah set to resign : கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையா இன்று (மே 28, 2026) தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என்ற தவவல்கள் வெளியாகியுள்ளன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்