நியூயார்க், ஜூன் 3, 2026: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடந்த கடுமையான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, ஈரான் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா காமனெய்யை சந்திக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்து, அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுப் போர் மற்றும் ஈரான் இடையேயான பதற்றமான சூழலில் வெளிப்பட்டுள்ளது.
அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுப் படைகள் பிப்ரவரி 28 அன்று ஈரானை தாக்கியதில், அப்போதைய உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெய் உயிரிழந்தார்.
பின்னர், அவரது மகன் 56 வயதான ஆயத்துல்லா மொஜ்தபா காமனெய் ஈரானின் புதிய உச்சத் தலைவராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், டிரம்ப், மொஜ்தபா காமனெய் தாக்குதல்களில் கடுமையாக காயமடைந்திருக்கலாம் எனக் கூறியுள்ளார். இது குறித்து ட்ரம்ப், “அவரின் உடல்நிலை சிறப்பாக இல்லை, பல்வேறு உறுப்புகளை இழந்திருக்கிறார்” என்றார்.
ட்ரம்ப் பேச்சு
இது தொடர்பாக, நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட “Pod Force One” பாட்காஸ்டில் பேசிய டிரம்ப், “நாம் ஒருநாள் சந்திப்போம், சூழ்நிலைகள் எப்படி மாறுகின்றன என்பதைப் பொறுத்தது” எனக் கூறினார். அவர், ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தைகளில் இறுதி முடிவுகளை மொஜ்தபா காமனெய் எடுத்து வருகிறார் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
இதே நேரத்தில், டிரம்ப்–நெதன்யாகு தொலைபேசி உரையாடல் மிகவும் கடுமையாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரம்ப், “நீ பைத்தியமா? நான் உன்னை சிறையில் போகாமல் காப்பாற்றினேன்” எனக் கோபமாகக் கூறியதாக சில அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், லெபனானுடன் இஸ்ரேல் தொடர்ந்து மோதுவது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தார்.
இஸ்ரேல், ஹெஸ்பொல்லா மீது தெற்கு லெபனானில் தாக்குதலை அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் செய்து ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும், அணு திட்டத்தை கட்டுப்படுத்தவும் முயற்சி செய்து வருகிறது. இந்த தொலைபேசி உரையாடல், அமெரிக்கா–இஸ்ரேல் உறவுகள் எவ்வளவு பதற்றமாக உள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Gavaskar defends IPL : ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் மீது முணுமுணுப்பு மற்றும் புலம்பல் என் என கேள்வியெழுப்பியுள்ளார் சுனில் கவாஸ்கர்….
Moitra calls exits party cleansing : திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தூய்மைப்படுத்தப்படுகிறது என அக்கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்….
YouTuber faces dual charges : யூ-ட்யூபர் முக்தார் அஹமது எந்தெந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டார் என அவரது வழக்குரைஞர் கேள்வியெழுப்பியுள்ளார்….
TVK : இண்டி கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்காதது ஏன்?…
Kudankulam lawyer tragedy : திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளத்தில், வீட்டை சுத்தம் செய்தபோது காம்பவுண்ட் சுவரில் இருந்து விழுந்து வழக்கறிஞர் தீபிகா உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….
YouTuber Mukhtar Ahmed : தமிழக போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாக இருந்த பிரபல யூ-ட்யூபர் முக்தார் அஹமது கைது செய்யப்பட்டுள்ளார்…