மாஸ்கோ, பிப்.8, 2026: ரஷ்யாவில், பாஷ்கோர்டோஸ்தான் குடியரசின் உஃபாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உட்பட பலர் காயமடைந்தனர். துரதிர்ஷ்டவசமான இத்தாக்குதலில், நான்கு இந்திய மாணவர்கள் காயமடைந்ததாக ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், “ரஷ்ய அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்பில் உள்ளது. காயமடைந்த மாணவர்களுக்கு உதவி வழங்க கசானில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் உஃபாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ரஷ்ய பல்கலைக்கழக தாக்குதலில் காயமடைந்த நான்கு பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக ரஷ்ய மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, கத்தியுடன் ஆயுதம் ஏந்திய ஒரு டீனேஜர் உஃபாவில் உள்ள அரசு மருத்துவ பல்கலைக்கழக விடுதிக்குள் நுழைந்தார்.ஷ
இந்நிலையில் அங்கு கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாக்குதல் நடத்திய 15 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டவர், உள்ளூர் குழந்தைகள் மருத்துவமனையிலும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பாஷ்கோர்டோஸ்தான் குடியரசின் தலைநகரான உஃபாவில் உள்ள அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘நிபா வைரஸ் அரிதானது, அதேநேரம் ஆபத்தானது’.. உலக சுகாதார தலைவர்!
K. Bhagyaraj: மறைந்த இயக்குனர் கே பாக்யராஜின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன….
Sonakshi Sinha: எனக்கு விருப்பமான பணிகள் இல்லாவிட்டாலும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என லிங்கா பட நாயகி சோனாக்ஷி சின்கா தெரிவித்துள்ளார்….
Welcome to the Jungle : ஹாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் வெல்கம் டு தி ஜங்கிள் திரைப்படம் இரண்டாம் நாளில், ரூபாய் 36 கோடி வசூல்…
Ponting to Coach India? : இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் வரலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன….
Sharmistha Mukherjee : உலக அரங்கில் இக்கட்டான சூழ்நிலை நிலவும் போதிலும் இந்தியாவை வழி நடத்த பிரதமர் நரேந்திர மோடியை சிறந்த தலைவர் என முன்னாள் குடியரசு…
TET 2026 Paper Leak: மகாராஷ்டிரா TET 2026 தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவ் மாநிலத்தின் முதலமைச்சர் தேவேந்திரர்…