Rs 3,000 Crore Row in Tamil Nadu : தமிழகத்திற்கான கல்வி நிதியில் ரூ.3,000 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
Rs 3,000 Crore Row in Tamil Nadu : தமிழகத்திற்கான கல்வி நிதியில் ரூ.3,000 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Published on: April 18, 2026 at 6:39 pm
சென்னை, ஏப்.18, 2026: தமிழகத்துக்கு சேர வேண்டிய நிதியை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாகவும், மாநிலத்தின் உரிமைகளைப் பறிப்பதாகவும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை (ஏப்.18) குற்றஞ்சாட்டினார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய திமுக இளைஞர் அணித் தலைவரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், “கல்விக்காக ஒதுக்கப்பட்ட சுமார் ரூ.3,000 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை” என்று கூறினார்.
தொகுதி மறுவரையறை
தொடர்ந்து தொகுதி மறுவரையறை குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், “இந்த நடவடிக்கையை எதிர்த்த நாட்டின் முதல் நபர்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ஒருவர் என்று கூறினார்.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் மக்களவையில் இந்த முன்மொழிவு நிறைவேறவில்லை என்று கூறிய அவர், இது I.N.D.I.A கூட்டணிக்குக் கிடைத்த பெரும் வெற்றி என்றும் கூறினார்.
திமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்த அவர், பெண்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் “கலைஞர் மகளிர் உரிமைத் தோகை” திட்டம், கட்சி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்று கூறினார்.
ரூ.8 ஆயிரம் கூப்பன்
தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும் என்றும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் உள்ள 35 லட்சத்திற்கும் அதிகமான கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வருமான வரி செலுத்தாத பெண்கள் தங்களுக்கு விருப்பமான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க அல்லது மாற்றுவதற்காக ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன்களைப் பெறும் வாக்குறுதியையும் அவர் குறிப்பிட்டார்.
வாக்குப்பதிவு
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சினிமா மாடல்.. விஜயை விமர்சித்த பிரகாஷ் ராஜ்.. பின்னணி என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com