M K Stalin: ரூபாய் 7,375 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
M K Stalin: ரூபாய் 7,375 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
Published on: February 11, 2025 at 5:55 pm
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் ரூ.7,375 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட 19000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதலீடுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி பெரம்பலூர் திருச்சி மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைய உள்ளன. தமிழகத்தை பொறுத்த மட்டில் அந்நிய முதலீடு மட்டுமின்றி உள்ளூர் தொழிலதிபர்களின் முதலீடும் அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக கடந்த காலங்களில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தூத்துக்குடியில் வின் பாஸ்ட் தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. 400 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடாக செய்யப்பட்டன.
இந்த தொழிற்சாலை அமைய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழ்நாட்டின் மூன்றாவது ஆட்டோ உற்பத்தி மையமாக தூத்துக்குடி திகழும் என்றார். அதாவது சென்னை, ஓசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி திகழும் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க சென்னை வருகிறார் ராகுல் காந்தி.. பயண திட்டம் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com