Cauvery Water Row: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு நீர் திறப்பை உறுதி செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Cauvery Water Row: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு நீர் திறப்பை உறுதி செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published on: August 18, 2026 at 11:36 am
Updated on: August 18, 2026 at 11:37 am
புதுடெல்லி, ஆக.18, 2026: உச்ச நீதிமன்றம், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு நீர் திறப்பை உறுதி செய்யுமாறு கர்நாடக அரசுக்கு திங்கள்கிழமை (ஆக.17, 2026) உத்தரவிட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா தலைமையிலான அமர்வு, தமிழகம் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் போது இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
தமிழகம், ஆகஸ்ட் 31, 2026 வரை 36.635 முதல் 37 டி.எம்.சி நீரை விகிதாச்சார அடிப்படையில் திறந்துவிடுமாறு கோரியிருந்தது. முன்னதாக சி.டபிள்யூ.எம்.ஏ, ஆகஸ்ட் 27 வரை நாளொன்றுக்கு 12,000 கனஅடி அல்லது 1.036 டி.எம்.சி நீரை திறக்குமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது.
தமிழகத்தின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், கர்நாடகம் பாசனத்திற்காக நீரை திறந்தாலும் அது தமிழகத்தை வந்தடையவில்லை என்று வாதிட்டார். அப்போது, “அவர்களின் அணைகள் 76% கொள்ளளவில் உள்ளன. ஆகஸ்ட் 16 வரை 14.814 டி.எம்.சி நீரை மட்டுமே திறந்துள்ளனர். இன்னும் 20 டி.எம்.சி நீர் திறக்கப்பட வேண்டியுள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த கர்நாடகத்தின் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், தமிழகம் வழங்கிய தரவுகள் தவறானவை என்றும், CWMA உத்தரவுப்படி நீர் திறப்பு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீர் திறப்பு அளவு 12,000 கனஅடியைத் தாண்டியுள்ளதாக அவர் விளக்கினார்.
நீதிபதிகள், தற்போதைய நீர் திறப்பு நிலை குறித்த தெளிவான விவரங்களை இரு தரப்பினரும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதுடன், விசாரணையை ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை ஒத்திவைத்தனர்.
அடுத்த விசாரணை வரை சி.டபிள்யூ.எம்.ஏ உத்தரவுப்படி நீர் திறப்பு தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்யுமாறு கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகம், காவிரி டெல்டா பயிர்கள் சரியான நேரத்தில் கிடைக்கும் நீரைச் சார்ந்தே உள்ளன என்று வலியுறுத்தி, உடனடி நீர் திறப்பை கோரியுள்ளது.
இதையும் படிங்க : ரூ.75,000 வரை பெற்றுள்ள பயிர்க்கடன்கள் 100% தள்ளுபடி.. முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com