இடி, மின்னலுடன் மழை ; ஜில் ஜில் ஆகப்போகும் 8 மாவட்டங்கள் ; வானிலை மையம்

RMC Chennai | தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published on: October 29, 2024 at 9:23 am

Updated on: October 29, 2024 at 9:25 am

RMC Chennai | கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பொதுவாக ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 30.10.2024 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

31.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

01.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

02.11.2024 மற்றும் 03.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இதையும் படிங்க ஒரு முறை அல்ல.. இரு முறை தவறாக பாடப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்து; உதயநிதியை டிஸ்மிஸ் செய்க: எச்.ராஜா!

பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை..சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் CPM Leader Shanmugam

பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை..சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்

CPM Leader Shanmugam: கூட்டணியில் புதிதாக கட்சிகள் வந்ததால் பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை என்று சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார்….

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்.. ரஜிகாந்த் Rajinikanth

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்.. ரஜிகாந்த்

Rajinikanth: தவெக ஆதவ் அர்ஜுனாவுக்கு பதிலளித்து நடிகர் ரஜினி காந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்….

நெல்லை அருகே திகில்: எரிந்த காரில் 4 பேர் சடலமாக மீட்பு Thisayanvilai

நெல்லை அருகே திகில்: எரிந்த காரில் 4 பேர் சடலமாக மீட்பு

Thisayanvilai: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே எரிந்த காரில் 4 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com