H Raja |கரூரில் பாரதிய ஜனதா உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடந்தது. இந்த விழாவில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எச் ராஜா கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “உதயநிதி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஒரு முறை அல்ல இரண்டு முறை தமிழ் தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளது” என்றார். தொடர்ந்து உதயநிதியின் துணை முதலமைச்சர் பதவியை மு.க ஸ்டாலின் பறிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
விசிகவினருக்கு கண்டனம்
கரூரில் உள்ள மொபைல் கடை ஒன்றில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்தை பெயிண்ட் ஊற்றி விசிகவினர் அழித்து உள்ளனர். இது கடும் கண்டனத்திற்கு உரியது; இவர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, “கட்டணம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள பக்தர்கள் சுரண்டப்படுகின்றனர். இதற்கு முடிவு கட்ட விரைவில் இயக்கம் நடத்தப்படும்” என்றார்.
இதையும் படிங்க
Madras High Court Judges : சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்….
Dindigul Electrocution Incident : திண்டுக்கலில் மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….
Tamil Nadu Cabinet Expansion : தமிழ்நாடு அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்