திருநெல்வேலியில் ஆன்லைன் மோசடி: டெல்லியை சேர்ந்த 3 பேருக்கு சிறை

Tirunelveli cyber crime case: திருநெல்வேலி மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால், மாவட்டத்தில் முதல் முறையாக ஆன்லைன் கல்வி உதவித்தொகை (Online Scholarship Fraud) மோசடி வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Published on: June 2, 2026 at 11:48 am

திருநெல்வேலி, ஜுன் 2 2026: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பாணான் குளத்தைச் சேர்ந்த லட்சுமணன் (48) என்பவரின் மகளுக்கு கடந்த மார்ச் 17-ஆம் தேதி, கல்வி உதவித்தொகை வந்திருப்பதாக கூறி, வாட்ஸ் அப் மூலம் QR கோடு அனுப்பி சுமார் ரூ.1 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக திருநெல்வேலி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் மகாலெட்சுமி தலைமையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், டெல்லியைச் சேர்ந்த ராஜு (25), ரிஷி (27), ராகுல் (35) ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் சத்யா, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து குற்றவாளிகள் மூவருக்கும் தலா 2 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுத்தந்த சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முருகன், திறம்பட விசாரணை நடத்திய காவல் ஆய்வாளர் மகாலெட்சுமி, உதவி செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் அரசு வழக்கறிஞர் அருண் பாண்டியன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வி. பிரசன்ன குமார், ஐ.பி.எஸ்., பாராட்டினார்.

இதையும் படிங்க: திருநெல்வேலியில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்.. 17 வயதான சிறுமி மீட்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com