உலக அளவில் தமிழ் கலை பங்களிப்பு.. ஜி.வி. பிரகாஷ், எம்.எஸ் பாஸ்கர்.. பிரேமலதா வாழ்த்து

Premalatha congratulates GV Prakash and MS Bhaskar: 71வது திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் விருது பெற்ற தமிழ் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோருக்கு தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Published on: September 25, 2025 at 2:40 pm

சென்னை, செப்.25, 2025: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், “71வது திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் விருது பெற்ற தமிழ் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோருக்கு வாழ்த்துகள்” தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும், “தமிழ் கலாச்சாரத்தின் பெருமையையும், தமிழ் சினிமாவின் உயர்வையும் உலகிற்கு உணர்த்தும் வகையில், டெல்லியில் நடைபெற்ற 71வது தேசிய சினிமா விருதுகள் வழங்கும் விழாவில், ‘வாத்தி’ திரைப் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்ற ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு வாழ்த்துகள்.

அதேபோல், ‘பார்க்கிங்’ படத்திற்காக சிறந்த தமிழ் திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருது பெற்ற இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன், மற்றும் ‘பார்க்கிங்’ படத்தில் நடித்து சிறந்த துணை நடிகர் விருது பெற்ற எம்.எஸ். பாஸ்கருக்கு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கலைமாமணி விருதுகள்

தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றம் மூலம் 2021, 2022, மற்றும் 2023 ஆண்டுகளுக்காக வழங்கப்பட்ட கலைமாமாணி விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் தேமுதிக சார்பாக எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, “இவர்களின் கலைப் பங்களிப்பு தமிழ் கலாச்சாரத்தின் புகழை உலக அரங்கில் பறைசாற்றுவதாக அமையட்டும்” எனவும் வாழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : சீமான் vs விஜயலட்சுமி.. மன்னிப்பை எதிர்பார்க்காதீர்கள்.. உச்ச நீதிமன்றம் அதிரடி

“யாரையும் நாங்கள் அழைக்கவில்லை”… ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!
Defection Row

“யாரையும் நாங்கள் அழைக்கவில்லை”… ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

‘3 நிமிடங்களில் படகு தலைகீழானது’… வியட்நாம் படகு விபத்தில் உயிர் தப்பிய தமிழரின் பதறவைக்கும் நிமிடங்கள்!
Vietnam Boat Tragedy

‘3 நிமிடங்களில் படகு தலைகீழானது’… வியட்நாம் படகு விபத்தில் உயிர் தப்பிய தமிழரின்

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய்
Perambur MLA Office

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com