குவைத்- சென்னை விமானத்தில் பரபரப்பு: நடுவானில் சிகரெட் பிடித்த பயணி!

குவைத்- சென்னை விமானத்தில் சிகரெட் பிடித்த பயணி கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.

Published on: September 3, 2024 at 11:06 am

Kuwait-Chennai flight | குவைத்தில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சிகரெட் பிடித்த திருவாரூரை சேர்ந்த பயணி ஃபரூக் (42) என்பவர் கைது செய்யப்பட்டார்.

வளைகுடா நாடான குவைத்தில் இருந்து சென்னை நோக்கி 178 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது.

இந்தப் பயணத்தில் திருவாரூரைச் சேர்ந்த 42 வயதான ஃபரூக் என்பவரும் பயணித்தார். அவர் விமானத்தில் வைத்து சிகரெட் பற்ற வைத்துள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விமான அதிகாரிகள் இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

அப்போது தன் மீது வழக்குப்பதிய வேண்டாம்; இனி இதுபோன்ற தவறுகளில் ஈடுபட மாட்டேன்” என காவல்துறைக்கு எழுத்துப்பூர்வ மன்னிப்பு கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து ஃபரூக் விடுவிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மழையால் குளிரப்போகும் 11 மாவட்டங்கள்: லிஸ்டில் உங்க ஊர் இருக்கா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com