திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் திருநங்கைகள் மீதான தடியடிக்கு நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

February 17, 2025
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் திருநங்கைகள் மீதான தடியடிக்கு நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Published on: September 27, 2024 at 6:06 pm
Updated on: September 27, 2024 at 8:05 pm
Lathi charge on transgenders | திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே காவல் கிணறு உள்ளிட்ட பகுதியில் நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சிலரிடம் பாலியல் ஆசைகளை காட்டி பண மோசடியிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவர்களிடம் பணத்தை இழந்தவர்கள் பணகுடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணகுடி காவல் நிலையம் முன்பு திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் எவ்வளவு கூறியும், அங்கிருந்து கலைய மறுத்துவிட்டனர். மேலும், தொடர்ந்து இடையூறு செய்ததால், போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை விரட்டினர்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்த நிலையில் இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளரும், தமிழக முதல் அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
#திருநெல்வேலிமாவட்டம் #பணங்குடி பகுதியில் திருநங்கைகள் மீது கடுமையான தாக்குதல் நடத்திய காவல்துறையை #நீலம்பண்பாட்டுமையம் மிக வன்மையாக கண்டிக்கிறது!
— நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) September 27, 2024
பாலியல் தொழில் செய்வதாக பொய் குற்றச்சாட்டை சுமத்தி
இரண்டு திருநங்கைகளை விசாரணைக்கு அழைத்துச் சென்றிருந்த காவல்துறையின் தவறான (1/ pic.twitter.com/3SHbOIQC9h
அதில், நீலம் பண்பாட்டு மையத்தினர் பணகுடி காவல் நிலையத்தில் திருநங்கைகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளனர். தொடர்ந்து, “திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் திருநங்கைகள் மீது கடுமையான தாக்குதல் நடத்திய காவல்துறையை நீலம் பண்பாட்டுமையம் மிக வன்மையாக கண்டிக்கிறது” எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : மும்பையில் சிக்கிய வங்கதேச நடிகை: பகீர் பின்னணி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com