மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் லட்டு தரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.

February 17, 2025
மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் லட்டு தரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.
Published on: September 25, 2024 at 4:56 pm
Madurai | திருப்பதி கோவிலில் பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்தக் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படும் நெய் தரமற்றதாக இருப்பதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் லட்டுவில் தரமற்ற நெய் கலந்திருப்பது தெரியவந்தது. இது உலகம் முழுக்க உள்ள பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் லட்டு குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
அந்த விளக்கத்தில், “மதுரை மீனாட்சியம்மன் கோவில் லட்டு தரமாக உள்ளது. லட்டுவில் எந்த கலப்படமும் இல்லை. இது தொடர்பாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “கோவிலில் தயாரிக்கப்படும் பிரசாதமாக லட்டு சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகிறது. பரிசோதனை செய்த பிறகே பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : திருப்பதி லட்டின் தரம் குறைவு; பண்டைய காலத்தில் என்ன தண்டனை? கல்வெட்டு தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com