சிவகங்கை ; சிறுமிக்கு பாலியல் தொல்லை ; முதியவருக்கு 10 ஆண்டு சிறை

சிவகங்கையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Published on: December 7, 2024 at 1:20 pm

Updated on: December 7, 2024 at 3:49 pm

Sivaganga | சிவகங்கையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவர் ராஜேந்திரன் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் தேவகோட்டை அனைத்து மகளிர் போலீசார் ராஜேந்திரனை (தற்போது வயது 78) கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி, ராஜேந்திரனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.

இதையும் படிங்க

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com