SIP Growth Projection : மாதம் ரூ.10,000-ஐ மியூச்சுவல் ஃபண்ட் SIP-ல் தொடர்ந்து முதலீடு செய்தால், 10, 20 மற்றும் 30 ஆண்டுகளில் எவ்வளவு சொத்து உருவாகும்? 12% ஆண்டு வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட கணக்கீடு நீண்டகால முதலீட்டின் வலிமையை வெளிப்படுத்துகிறது.
SIP Growth Projection : மாதம் ரூ.10,000-ஐ மியூச்சுவல் ஃபண்ட் SIP-ல் தொடர்ந்து முதலீடு செய்தால், 10, 20 மற்றும் 30 ஆண்டுகளில் எவ்வளவு சொத்து உருவாகும்? 12% ஆண்டு வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட கணக்கீடு நீண்டகால முதலீட்டின் வலிமையை வெளிப்படுத்துகிறது.

Published on: August 4, 2026 at 12:55 pm
சென்னை, ஆக. 4 2026: மியூச்சுவல் ஃபண்ட் ஸிஸ்டெமடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்பது, ஒரு குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் தொடர்ந்து முதலீடு செய்யும் முறையாகும். இந்த முதலீட்டில் கூட்டுவட்டி (Compounding) மற்றும் நீண்டகால முதலீட்டின் பலன் காரணமாக, சிறிய தொகையும் காலப்போக்கில் பெரிய சொத்தாக வளரக்கூடும். இருப்பினும், SIP-யில் கிடைக்கும் வருமானம் சந்தை நிலவரத்தைப் பொறுத்தது; எந்த வருமானமும் உறுதியானது அல்ல.
10 ஆண்டுகளில் ₹23 லட்சம் சேமிப்பு!
மியூச்சுவல் ஃபண்ட்திட்டங்களில் முறையான முதலீட்டுத் திட்டமான எஸ்.ஐ.பிமூலம் முதலீடு செய்வது, எளிய முதலீட்டாளர்களும் பெரிய நிதியை உருவாக்க உதவும் ஒரு சிறந்த வழியாகும். ஒருவர் மாதம் ₹10,000 வீதம் தொடர்ந்து 10 ஆண்டுகள் முதலீடு செய்து, ஆண்டிற்கு சராசரியாக 12% கூட்டு வட்டி வருமானம் பெறுகிறார் என்றால், அவர் முதலீடு செய்த மொத்தத் தொகை ₹12 லட்சமாகும் . 10 ஆண்டுகளின் முடிவில் இந்த முதலீடு கூட்டு வட்டி வளர்ச்சியுடன் சேர்ந்து தோராயமாக ₹23.23 லட்சம்என்ற முதிர்வுத் தொகையாக உயரும். இதில் கிடைத்த நிகர லாபம் மட்டும் ₹11.23 லட்சமாகும்.
20 ஆண்டுகளில் கோடீஸ்வர கனவு சாத்தியம்!
முதலீட்டுக் காலத்தை 20 ஆண்டுகளாக நீட்டிக்கும் போது, கூட்டு வட்டியின் ஆற்றல் மிக வேகமான வளர்ச்சியைத் தருகிறது. மாதம் ₹10,000 வீதம் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் போது, முதலீட்டாளர் செலுத்தும் மொத்த அசல் தொகை ₹24 லட்சமாகும். 12% சராசரி வருமான விகிதத்தில், 20 ஆண்டுகளின் முடிவில் இந்த முதலீட்டின் மதிப்பு கிட்டத்தட்ட ₹1 கோடியை எட்டுகிறது. இதில் வட்டி மூலமாக மட்டுமே தோராயமாக ₹75.91 லட்சம் லாபமாகக் கிடைக்கிறது. நீண்டகால முதலீட்டில் அசல் தொகையை விட வட்டி வருமானமே பல மடங்கு அதிகமாகும் என்பதற்கு இதுவே சிறந்த சான்றாகும்.
30 ஆண்டுகளில் ₹3.5 கோடி கார்ப்பஸ் நிதி!
30 ஆண்டுகள் என்ற நீண்டகால இலக்கோடு மாதம் ₹10,000 முதலீடு செய்யும் போது, நிதியின் வளர்ச்சி பிரமாண்டமான நிலையை எட்டுகிறது. 30 ஆண்டுகளில் முதலீட்டாளர் செலுத்தும் மொத்தத் தொகை ₹36 லட்சமாகும். ஆனால் 12% வருமானக் கணக்கீட்டின் படி, 30 ஆண்டுகளின் முடிவில் கிடைக்கும் மொத்த நிதி மதிப்பு ₹3.53 கோடியாக பெருகும். இதில் ஈட்டப்பட்ட நிகர லாபம் மட்டும் ₹3.17 கோடியாகும். அதாவது, நீங்கள் முதலீடு செய்த அசல் தொகையை விட கிட்டத்தட்ட 10 மடங்கு கூடுதல் தொகையை கூட்டு வட்டி மூலம் லாபமாகப் பெற முடிகிறது.
எனினும், இவை அனைத்தும் 12% ஆண்டு வருமானம் கிடைக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையிலான கணக்கீடுகள் மட்டுமே. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என்பதால், முதலீடு செய்வதற்கு முன் திட்ட ஆவணங்களை கவனமாகப் படித்து, தேவையெனில் நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
இதையும் படிங்க இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்கள் மாற்றம்? ஆக.5 கொள்கை குழு கூட்டம்.. முமு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com