Reserve bank of india: இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கைக் குழு கூட்டம் ஆக.5ஆம் தேதி நடைபெறுகிறது.
Reserve bank of india: இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கைக் குழு கூட்டம் ஆக.5ஆம் தேதி நடைபெறுகிறது.

Published on: August 3, 2026 at 4:53 pm
புதுடெல்லி, ஆக.3, 2026: ஆகஸ்ட் 5 அன்று நடைபெறவுள்ள ரிசர்வ் வங்கியின் கொள்கைக் குழு கூட்டத்தில் வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடரும் என நிபுணர்கள் பரவலாகக் கருதுகின்றனர்.
மேற்கு ஆசியாவில் நீடிக்கும் மோதல்கள் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பணவீக்க அழுத்தம் அதிகரித்தாலும், உள்நாட்டு பொருளாதாரம் உறுதியான நிலையை வெளிப்படுத்தி வருவதால், தற்போதைக்கு RBI தனது கொள்கை நிலைப்பாட்டை மாற்றாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சனிக்கிழமை நிலவரப்படி, எண்ணெய் விலை உயர்வு, பலவீனமான பருவமழை மற்றும் குறைந்த நீர் இருப்பு ஆகியவை பணவீக்க அபாயங்களை மேலும் அதிகரிக்கக்கூடியதாக உள்ளன. இதற்கிடையில், “பருவமழையின் போக்கு மற்றும் உணவுப் பொருட்களின் விலையில் அது ஏற்படுத்தும் தாக்கத்தை கொள்கை குழு கூட்ட உறுப்பினர்கள் கவனமாகக் கண்காணிப்பார்கள். தற்போதைக்கு இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களையோ அல்லது தனது கொள்கை நிலைப்பாட்டையோ மாற்றாது,” என்று பாங்க் ஆஃப் பரோடாவின் பொருளாதார நிபுணர் சோனல் பதான் தெரிவித்தார்.
மேலும், எஸ்.பி.எம் வங்கியின் நிதிச் சந்தைகள் பிரிவுத் தலைவர் மந்தர் பிடாலே, “தற்போதைய வளர்ச்சி-பணவீக்க சூழல், உடனடி எதிர்காலத்தில் பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலையில், வளர்ச்சிக்குச் சில அபாயங்களை சுட்டிக்காட்டுகிறது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மையும் இணைந்துள்ளதால், கொள்கை குழு ஆகஸ்ட் கூட்டத்தில் வட்டி விகித உயர்வை அவசரமாக பரிசீலிக்காது,” என்றார்.
இந்த நிலையில், ‘கேர் எட்ஜ்’ அறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டில் வட்டி விகித உயர்வு இருக்காது என்பதே முக்கிய எதிர்பார்ப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பணவீக்கத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு அல்லது புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரித்தால் மட்டுமே, 2026-27 நிதியாண்டில் (FY27) வட்டி விகித உயர்வு குறித்து பரிசீலிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜூன் 5 அன்று நடைபெற்ற கூட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை 5.25% என்ற அளவில் மாற்றமின்றி வைத்திருந்தது. இருப்பினும், எண்ணெய் விலை உயர்வு, மோசமான வானிலை, உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மை மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் ஆகியவை பொருளாதாரக் கண்ணோட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின. இதனால், இந்திய ரிசர்வ் வங்கி தனது வளர்ச்சி மற்றும் பணவீக்கக் கணிப்புகளை மறுஆய்வு செய்துள்ளது. இருப்பினும், ஆகஸ்ட் 5 கூட்டத்தில் ‘ரெப்போ’ விகிதம் மாற்றமின்றி தொடரும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : ஸி நிறுவனத்தில் நிதி திரட்டும் திட்டம்.. தடை விதித்த செபி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com