குற்றவாளிகளை பிடிக்க சென்ற பெண் காவலர்கள் மரணம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Edappadi Palaniswami |“ திமுக அரசின் அலட்சியத்தால் இரண்டு பெண் போலீசார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Published on: November 4, 2024 at 10:55 pm

Edappadi Palaniswami | “ திமுக அரசின் அலட்சியத்தால் இரண்டு பெண் போலீசார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “குற்றவாளிகளைப் பிடிக்கச் செல்லும் காவல்துறையினருக்கு, குறிப்பாக பெண் காவலர்களுக்கு எந்தவித வசதியும் செய்து தராத இந்த திமுக அரசின் அலட்சியத்தால் இரண்டு பெண் போலீசார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மாதவரம் காவல்நிலையத்தைச் சேர்ந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ மற்றும் பெண் காவலர் நித்யா ஆகிய இருவரும் ஒரு வழக்கு தொடர்பாக குற்றவாளியைப் பிடிக்க செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சென்றுள்ளனர். மதுராந்தகத்தில் இருவரும் இருசக்கர வாகனத்தில் குற்றவாளிகளைத் தேடிச் சென்றபோது சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இருந்து அவர்கள் இருவரும் எப்படிச் சென்றார்கள் என்று தெரியாத நிலையில் மதுராந்தகம் காவல்துறையினரும் அவர்கள் இருவருக்கும் வேண்டிய வாகன வசதிகளை செய்து தராதது கண்டிக்கத்தக்கதாகும்.

இந்த அரசின் அஜாக்கிரதையால் பணியின்போது உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டுமென்றும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் உடனடியாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டுமென்றும், இனிமேலும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலினின் தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்து இருந்தார்.

காவல் ஆணையர் மறுப்பு

இந்த நிலையில் இதனை காவல் ஆணையர் சங்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று (04-11-2024) காலை சுமார் 2 மணியளவில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ மற்றும் முதல் நிலை காவலர் நித்யா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்னையிலிருந்து திருச்சி நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூர் பத்மாவதி திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தாலுகா குன்னக்குப்பம் கிராமத்தை சேர்ந்த மதன்குமார் என்பவர் ஓட்டி வந்த கார் அவர்கள் மீது மோதியதில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். மேலும் பலத்த காயம் அடைந்த முதல்-நிலை காவலர் நித்யா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ மதுரையையும், நித்யா திண்டுக்கல் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள். மேலும், இவர்கள் இருசக்கர வாகனத்தில் தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளும் பழக்கம் உடையவர்கள். சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலர்கள் இருவரும் அலுவலக பணி ரீதியாக செல்லவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க நீர்நிலைகளை தனியாருக்கு தாரை வார்க்கத் துடிப்பதா? தி.மு.க. அரசுக்கு அன்புமணி கேள்வி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com