அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை இன்றைக்குள் வழங்க வேண்டும் ; மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss | 20 நாட்களாகியும் அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படாத தீபஒளி ஊக்கத்தொகையை இன்றைக்குள் வழங்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: October 29, 2024 at 11:24 am

Dr Ramadoss | பா.ம.க. நிறுவனர் மருத்தவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு தீப ஒளி திருநாளையொட்டி 20% ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 10-ஆம் தேதி அறிவித்திருந்தார். அதன் பிறகு இன்றுடன் 20 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு தீப ஒளி ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. அதேபோல், மேலும் பல பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை. உழைக்கும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் அரசு காட்டும் தேவையற்ற தாமதம் கண்டிக்கத்தக்கது.

வழக்கத்தை விட நடப்பாண்டில் முன்கூட்டியே ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்ட நிலையில், அதே வேகத்தில் அது வழங்கப்பட்டு விடும் என்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம் தான் விஞ்சியது. இறுதியாக நேற்று திங்கள் கிழமை தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று இரவு வரை தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. தீப ஒளி திருநாளுக்கு இன்னும் இரு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இன்னும் ஊக்கத்தொகை வழங்காமல் தமிழக அரசு தாமதப்படுத்துவன் நோக்கம் தெரியவில்லை. குறித்த காலத்தில் வழங்கப்படாத ஊக்கத்தொகை பயனற்றதாகி விடும் என்பதை அரசு உணர வேண்டும்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் அனைத்து ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் இன்று முதல் தீப ஒளி திருநாள் வரை சிறப்புப்பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால், தீப ஒளி முடிவடையும் வரை அவர்களால் குடும்பத்தினருடன் சென்று தீப ஒளிக்கு தேவையான புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவது சாத்தியப்படாது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தீப ஒளிக்கான ஊக்கத்தொகையை போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு முன்கூட்டியே அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தொழிலாளர்களின் வலிகளை புரிந்து கொள்ள அரசு தவறிவிட்டது. ஒரு நாளுக்கு 12 மணி நேரம் பணி செய்ய சட்டம் கொண்டு வந்த முதலாளித்துவ அரசிடமிருந்து இத்தகைய குறைந்தபட்ச தொழிலாளர் ஆதரவு செயல்பாடுகளை எதிர்பார்ப்பது கூட பாட்டாளிகளின் தவறு தான்.

தீப ஒளி திருநாளுக்கு முழுமையாக நாளைய ஒரு பொழுது மட்டுமே இருக்கும் நிலையில், போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கும், இதுவரை ஊக்கத்தொகை வழங்கப்படாத பிற பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கும் இன்றைக்குள் தீப ஒளி ஊக்கத்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி போக்குவரத்துத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் சென்று தீப ஒளிக்கான பொருட்களை வாங்குவதற்கு வசதியாக ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பணி இடைவெளி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க 4,900 சிறப்பு பேருந்துகள் இன்று முதல்.. தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?

சிறுநீரகக் கொள்ளை பதற்றம் தீரும் முன்பே கல்லீரல் திருட்டு? பகீர் கிளப்பும் அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss

சிறுநீரகக் கொள்ளை பதற்றம் தீரும் முன்பே கல்லீரல் திருட்டு? பகீர் கிளப்பும் அன்புமணி

“சிறுநீரகக் கொள்ளை பதட்டம் தீரும் முன்பே கல்லீரல் திருட்டு” என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்….

வீண்செலவில் தமிழ்நாடு முதலிடம்.. கோடிகளை பட்டியலிட்ட அன்புமணி ராமதாஸ்! Anbumani Ramadoss

வீண்செலவில் தமிழ்நாடு முதலிடம்.. கோடிகளை பட்டியலிட்ட அன்புமணி ராமதாஸ்!

Anbumani Ramadoss: காலாண்டு கடன் ரூ.26,563 கோடி, மூலதனச் செலவு ரூ.4155 கோடி என சுட்டிக்காட்டியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், வீண்செலவில் தமிழ்நாடு முதலிடம் எனக்…

காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்துங்கள்.. தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்! Anbumani Ramadoss

காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்துங்கள்.. தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்!

Anbumani Ramadoss: “தருமபுரி மாவட்டம் மீதான வன்மத்தைக் கைவிடுங்கள்” எனத் தெரிவித்துள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், “காவிரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துங்கள்” எனவும்…

வயல்வெளியில் மின்சாரம் தாக்கி விவசாயி மரணம்.. இழப்பீடு வழங்க ராமதாஸ் கோரிக்கை PMK Party founder Doctor Ramadoss

வயல்வெளியில் மின்சாரம் தாக்கி விவசாயி மரணம்.. இழப்பீடு வழங்க ராமதாஸ் கோரிக்கை

Dr Ramadoss: வயல்வெளியில் மின்சாரம் தாக்கி விவசாயி மரணமடைந்துள்ள நிலையில், அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்….

சென்னையில் நெடுஞ்சாலை தனியாருக்கு விற்பனை? அன்புமணி ராமதாஸ் கண்டனம் Anbumani questions DMK

சென்னையில் நெடுஞ்சாலை தனியாருக்கு விற்பனை? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Anbumani questions DMK : மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலையை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு எடுப்பதா என தி.மு.க. அரசிடம் கேள்வியெழுப்பியுள்ளார் அன்புமணி ராமதாஸ்….

பூம்புகாருக்கு குடும்பத்துடன் வாரீர்.. பா.ம.க. மகளிர் மாநாடு.. மருத்துவர் ராமதாஸ் அழைப்பு! PMK party womens conference

பூம்புகாருக்கு குடும்பத்துடன் வாரீர்.. பா.ம.க. மகளிர் மாநாடு.. மருத்துவர் ராமதாஸ் அழைப்பு!

PMK party womens conference: பாட்டாளி மக்கள் கட்சி மாநாடு ஆக.10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கட்சியின் நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com