அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை இன்றைக்குள் வழங்க வேண்டும் ; மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss | 20 நாட்களாகியும் அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படாத தீபஒளி ஊக்கத்தொகையை இன்றைக்குள் வழங்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: October 29, 2024 at 11:24 am

Dr Ramadoss | பா.ம.க. நிறுவனர் மருத்தவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு தீப ஒளி திருநாளையொட்டி 20% ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 10-ஆம் தேதி அறிவித்திருந்தார். அதன் பிறகு இன்றுடன் 20 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு தீப ஒளி ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. அதேபோல், மேலும் பல பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை. உழைக்கும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் அரசு காட்டும் தேவையற்ற தாமதம் கண்டிக்கத்தக்கது.

வழக்கத்தை விட நடப்பாண்டில் முன்கூட்டியே ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்ட நிலையில், அதே வேகத்தில் அது வழங்கப்பட்டு விடும் என்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம் தான் விஞ்சியது. இறுதியாக நேற்று திங்கள் கிழமை தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று இரவு வரை தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. தீப ஒளி திருநாளுக்கு இன்னும் இரு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இன்னும் ஊக்கத்தொகை வழங்காமல் தமிழக அரசு தாமதப்படுத்துவன் நோக்கம் தெரியவில்லை. குறித்த காலத்தில் வழங்கப்படாத ஊக்கத்தொகை பயனற்றதாகி விடும் என்பதை அரசு உணர வேண்டும்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் அனைத்து ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் இன்று முதல் தீப ஒளி திருநாள் வரை சிறப்புப்பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால், தீப ஒளி முடிவடையும் வரை அவர்களால் குடும்பத்தினருடன் சென்று தீப ஒளிக்கு தேவையான புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவது சாத்தியப்படாது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தீப ஒளிக்கான ஊக்கத்தொகையை போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு முன்கூட்டியே அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தொழிலாளர்களின் வலிகளை புரிந்து கொள்ள அரசு தவறிவிட்டது. ஒரு நாளுக்கு 12 மணி நேரம் பணி செய்ய சட்டம் கொண்டு வந்த முதலாளித்துவ அரசிடமிருந்து இத்தகைய குறைந்தபட்ச தொழிலாளர் ஆதரவு செயல்பாடுகளை எதிர்பார்ப்பது கூட பாட்டாளிகளின் தவறு தான்.

தீப ஒளி திருநாளுக்கு முழுமையாக நாளைய ஒரு பொழுது மட்டுமே இருக்கும் நிலையில், போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கும், இதுவரை ஊக்கத்தொகை வழங்கப்படாத பிற பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கும் இன்றைக்குள் தீப ஒளி ஊக்கத்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி போக்குவரத்துத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் சென்று தீப ஒளிக்கான பொருட்களை வாங்குவதற்கு வசதியாக ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பணி இடைவெளி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க 4,900 சிறப்பு பேருந்துகள் இன்று முதல்.. தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?

தூர்வாரும் பணிக்கு நிதி ஒதுக்கீடு.. தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்.. தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை! Dr. Ramadoss

தூர்வாரும் பணிக்கு நிதி ஒதுக்கீடு.. தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்.. தமிழக அரசுக்கு ராமதாஸ்

Dr. Ramadoss: “தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி அனுமதி பெற்று நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என பாட்டாளி மக்கள் கட்சி…

ரூ.1.33 லட்சம் கோடியை திமுக அரசு என்ன செய்தது? அன்புமணி ராமதாஸ் கேள்வி Anbumani Ramadoss

ரூ.1.33 லட்சம் கோடியை திமுக அரசு என்ன செய்தது? அன்புமணி ராமதாஸ் கேள்வி

Anbumani Ramadoss: ரூ.1.33 லட்சம் கோடியை திமுக அரசு என்ன செய்தது? என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்….

ஓட்டுனர், நடத்துனர் நியமன போட்டித்தேர்வு..இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதா… அன்புமணி கேள்வி Anbumani Ramadoss

ஓட்டுனர், நடத்துனர் நியமன போட்டித்தேர்வு..இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதா… அன்புமணி கேள்வி

Anbumani Ramadoss: அரசுப் போக்குவரத்துக்கழகங்களுக்கு 3274 ஓட்டுனர், நடத்துனர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்….

காஞ்சிபுரத்தில் சளி தொல்லை பாதிப்பு.. மருத்துவர் ராமதாஸ் அறிக்கை! Dr Ramadoss

காஞ்சிபுரத்தில் சளி தொல்லை பாதிப்பு.. மருத்துவர் ராமதாஸ் அறிக்கை!

Dr Ramadoss: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சளி பாதிப்பு தொல்லை அதிகரித்து காணப்படுகிறது; மக்கள் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர்…

அங்கன்வாடி ஊழியர்களின் 13 அம்ச கோரிக்கை என்னாச்சு? அன்புமணி ராமதாஸ் கேள்வி Anbumani Ramadoss

அங்கன்வாடி ஊழியர்களின் 13 அம்ச கோரிக்கை என்னாச்சு? அன்புமணி ராமதாஸ் கேள்வி

Anbumani Ramadoss: ஓய்வூதியம் உயர்வு, பணிக்கொடை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திவரும் அங்கன்வாடி ஊழியர்களுடன் தி.மு.க. அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என…

செய்தியாளர் கடத்தல்.. தி.மு.க எம்.எல்.ஏ.வை கைது செய்க.. அன்புமணி TN Journalists Kidnapping Case

செய்தியாளர் கடத்தல்.. தி.மு.க எம்.எல்.ஏ.வை கைது செய்க.. அன்புமணி

TN Journalists Kidnapping Case: “கனிமக்கொள்ளையை படம் பிடித்த செய்தியாளர் கடத்தல் விவகாரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டும்” என பா.ம.க தலைவர் அன்புமணி…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com