Dr Ramadoss | பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை கதீட்ரல் சாலையில் தனியாரிடமிருந்து மீட்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிலத்தில் வெளிநாடுகளுக்கு இணையான அம்சங்களுடம் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால், அதற்கான கட்டணம் ஏழை மக்களால் செலுத்த முடியாத அளவுக்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது சரியல்ல.
நுழைவுக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது 3 மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பூங்காவில் உள்ள பிற வசதிகளை பார்வையிட தனித்தனிக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள ரூ.250, பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டு பறவைகளை பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திட ரூ.150, இசை நீருற்றின் கண்கவர் நடனத்தை காண ரூ.50, கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட ரூ.50, குழந்தைகள் சவாரி விளையாட்டுக்கு ரூ.50 என ஒருவர் பூங்காவின் அனைத்து அம்சங்களையும் அனுபவிக்க ரூ.650 செலுத்த வேண்டும். இது மிக அதிகம்.
செம்மொழிப் பூங்காவுக்கு இணையாக கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவின் நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். பூங்காவில் உள்ள அனைத்து அம்சங்களையும் அனுபவிக்க மொத்தமாக குறைந்த கட்டணத்தை நிர்ணயிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
அப்போது தான் பூங்கா உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். இல்லாவிட்டால் இது பணக்காரர்களுக்கான பூங்காவாகவே பார்க்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : பழனி ரோப் கார்; அடுத்த 40 நாட்கள்: வெளியான முக்கிய அறிவிப்பு
Annamalai : திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் பா.ஜ.க வேட்பாளர் எஸ்.பி பாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக, அண்ணாமலை வாக்கு திரட்டினார்….
Assembly Election 2026: ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிக் கனி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. பிரதான போட்டி தி.மு.க.வின்…
G V Prakash Kumar : இசையமைப்பாளர் நடிகர் என பன்முக திறமை கொண்ட ஜி.வி பிரகாஷ் குமார், தனது அடுத்த படத்தில் கிரிக்கெட் வீரராக நடிக்கிறார்….
Gold price in Chennai today : தங்கம் விலை இன்று (ஏப்.15, 2026) அதிரடியாக உயர்வை கண்டது….
Kerala Lottery Result Today : கேரள லாட்டரி தனலட்சுமி டி.எல்-48 குலுக்கல் முடிவுகள் இன்று (ஏப்.15, 2026) மாலை 3 மணிக்கு வெளியானது….
Trisha : நடிகை திரிஷா கிருஷ்ணன் தனது சென்னை இல்லத்தில் குண்டு மிரட்டல் பொய்யான தகவலை போலீசார் விசாரித்த பின்னரும், கவலைப்படாமல் பதிவுகள் வெளியிட்டார்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்