சென்னை, ஆக.19 2025: தி.மு.க பொருளாளர் டி.ஆர். பாலு மனைவி இயற்கை எய்தியுள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு டி.ஆர். பாலு அவர்களின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்களின் அன்னையுமான திருமதி. ரேணுகா தேவி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
திருமதி ரேணுகாதேவி அவர்களை இழந்துவாடும் திரு.டி.ஆர் பாலு அவர்களுக்கும், திரு டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Annamalai: நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய்- சங்கீதா பிரிவு குறித்து செய்தியாளர்கள் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கு அண்ணாமலை இடம்…
Israeli airstrike on Iran: ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 51 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்….
Holi 2026: தீபாவளிக்குப் பிறகு இரண்டாவது பெரிய இந்து பண்டிகையாக ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது….
M. H. Jawahirullah: மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்கி திமுக வழங்கி உள்ளது….
Andhra fire accident: ஆந்திராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 21 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….
Dr. Ramadoss: திமுக அரசின் அலட்சியத்தால் நெல் கொள்முதல் நிலையங்களில் லட்சக்கணக்கான மூட்டைகள் தேங்கியுள்ள நிலையில் மீண்டும் ஒரு பேரிழப்பு ஏற்படக்கூடாது என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்….