பெங்களூரு, ஆக.19 2025: கர்நாடகா மாநிலத்தின் தாவங்கேரில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன்பு தெருநாய் கடித்த 4 வயதான சிறுமி, செவ்வாய்க்கிழமை (ஆக.19 2025) பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருக்கு கடுமையான ரேபிஸ் நோய் பாதிப்புகள் இருந்துள்ளன.
முன்னதாக, கதீரா பானு பெங்களூரு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்று வந்தார். சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு, ஏப்ரல் மாதம் அந்தச் சிறுமி வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தபோது, தெருநாய் ஒன்று அவளைக் கடித்து குதறிவிட்டது.
அந்த நாய் அவளது முகத்தையும் உடலின் பிற பாகங்களையும் கடித்து இருந்தது. இதில் சிறமி படுகாயம் அடைந்தார். உடனடியாக அவளை அவளது குடும்பத்தினர் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் உயர் சிகிச்சைக்காக பெங்களூரு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, நாய் கடித்தால் ரேபிஸ் இறப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, டெல்லி-என்சிஆர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள அனைத்து தெருநாய்களையும் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து தங்குமிடங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Kerala Lottery Result Today : கேரள லாட்டரி இன்றைய (ஏப்.14, 2026) குலுக்கல் ஸ்திரி சக்தி SS-515 குலுக்கல் முடிவுகள் மாலை 3 மணிக்கு மேல்…
Stalin Threatens Anti-Delimitation Stir: தமிழ்நாடு கடைசி எச்சரிக்கை என்ற தலைப்பில் மு.க ஸ்டாலின் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்….
No Mass Hero Plans says Gautham : மாஸ் ஹீரோ ஆகும் திட்டம் தன்னிடம் இல்லை என நடிகர் கௌதம் ராம் கார்த்திக் கூறியுள்ளார்….
Hai Jawani Toh Ishq Hona Hai : வருண் தவான் நடிப்பில் ‘ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை’ வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. டேவிட் தவான்…
LIC Bonus Issue : முதல் முறையாக, எல்ஐசி 1:1 போனஸ் பங்கு வெளியீட்டை அறிவித்துள்ளது. சமீபத்திய டிசம்பர் காலாண்டில் எல்ஐசியின் நிகர வருமானம், ஒரு வருடத்திற்கு…
Iran Envoy in India: கடுமையான காலங்களில் ஆதரவு அளித்ததற்காக இந்தியாவுக்கு ஈரான் நன்றி தெரிவித்துள்ளது….