மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 5000 ஸ்லைடர் ஆமைகள்..இருவர் கைது!

Chennai International Airport | மலேசியாவில் இருந்து 5000 சிவப்பு காது கொண்ட ஸ்லைடர் ஆமைகளை கடத்தி வந்த இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Published on: October 1, 2024 at 3:33 pm

Chennai International Airport | மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆமைக்குஞ்சுகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். மலேசியா கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று (திங்கள்கிழமை) நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆண் பயணிகள் இருவர் சந்தேகப்படும் வகையில் இரண்டு பெரிய பிளாஸ்டிக் கூடைகளை எடுத்துச் சென்றுள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது, ​​சாக்லேட், பிஸ்கட் மற்றும் பொம்மைகள் வைத்திருப்பதாக முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்தனர். சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தியதில், கூடைகளுக்குள் ஏராளமான சிவப்பு காதுகள் கொண்ட ஸ்லைடர் ஆமைகளைக் கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்தனர். மேல் விசாரணைக்காக பெசன்ட் நகரில் உள்ள யூனியன் வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். ஒன்றிய வன உயிரின பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் வந்து, ஸ்லைடர் ஆமைகளை ஆய்வு செய்தனர்.

அவற்றில், 12 இறந்து கிடந்தன. மேலும், 19 அல்பினோ சிவப்பு காது ஸ்லைடர் ஆமை வகையைச் சேர்ந்தவை என்பதும் தெரியவந்தது. மேலும், கடத்தல் காரர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மலேசியாவில் இருந்து எந்த ஆவணமும் இல்லாமல் இந்தியா வந்துள்ளதை கண்டறிந்தனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த ஆமைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு, மற்ற விலங்குகளுக்கு தொற்று ஏதும் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு நோக்கங்களுக்காக சுங்க அதிகாரிகள் 4,986 உயிருள்ள ஆமைகளை மலேசியாவிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்தனர், அதே நேரத்தில் இறந்த 12 ஆமைகள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யப்பட்டன.

இதையும் படிங்க

வீக் எண்டுல கிண்டி சிறுவர் பூங்கா போகும் பிளானா? இந்த அறிவிப்பு உங்களுக்கு தான்! Guindy Children’s Park

வீக் எண்டுல கிண்டி சிறுவர் பூங்கா போகும் பிளானா? இந்த அறிவிப்பு உங்களுக்கு

Guindy Children’s Park: சென்னை கிண்டி சிறுவர் பூங்கா பறவைக் காய்ச்சல் காரணமாக காலவரையற்ற வகையில் மூடப்பட்டுள்ளது….

சத்தியமங்கல் காட்டுக்குள் 42 சட்டவிரோத ரிசார்ட்டுகள்.. அதிரடியாக சீல் வைத்த தமிழக அரசு! Tamil Nadu Government

சத்தியமங்கல் காட்டுக்குள் 42 சட்டவிரோத ரிசார்ட்டுகள்.. அதிரடியாக சீல் வைத்த தமிழக அரசு!

Tamil Nadu Government: சத்தியமங்கலத்தில் செயல்பட்ட 42 சட்டவிரோத ரிசார்ட்கள் சீல் வைக்கப்பட்டன என தமிழ்நாடு அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது….

சென்னையில் பெண் மீது ஆசிட் வீச்சு.. இளைஞர் கைது! Chennai Acid Attack

சென்னையில் பெண் மீது ஆசிட் வீச்சு.. இளைஞர் கைது!

Chennai Acid Attack : சென்னையில் திராவகம் வீச்சுக்குள்ளான பெண் பகுதி பார்வையை இழந்து உயிருக்கு போராடி வருகிறார்….

சென்னையில் போலீஸ் என்கவுன்ட்டர்.. பிரபல ரவுடி கணேஷ் மரணம்! Madhavaram Encounter

சென்னையில் போலீஸ் என்கவுன்ட்டர்.. பிரபல ரவுடி கணேஷ் மரணம்!

Madhavaram Encounter: Ganesh Killed: சென்னையில் போலீஸ் என்கவுன்ட்டரில் பிரபல ரவுடி ஆர். கணேஷ் என்ற தொப்பை கணேஷ் மரணமடைந்தார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட கேஸ் சிலிண்டர் வெடிப்பு? 2 குழந்தைகள் பலி.. சென்னையில் பரிதாபம்! Chennai

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட கேஸ் சிலிண்டர் வெடிப்பு? 2 குழந்தைகள் பலி.. சென்னையில்

Chennai: சென்னையின் நவலூரில் எல்.பி.ஜி. சிலிண்டர் வெடித்து சிதறியதில், இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்; மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com