மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 5000 ஸ்லைடர் ஆமைகள்..இருவர் கைது!

Chennai International Airport | மலேசியாவில் இருந்து 5000 சிவப்பு காது கொண்ட ஸ்லைடர் ஆமைகளை கடத்தி வந்த இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Published on: October 1, 2024 at 3:33 pm

Chennai International Airport | மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆமைக்குஞ்சுகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். மலேசியா கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று (திங்கள்கிழமை) நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆண் பயணிகள் இருவர் சந்தேகப்படும் வகையில் இரண்டு பெரிய பிளாஸ்டிக் கூடைகளை எடுத்துச் சென்றுள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது, ​​சாக்லேட், பிஸ்கட் மற்றும் பொம்மைகள் வைத்திருப்பதாக முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்தனர். சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தியதில், கூடைகளுக்குள் ஏராளமான சிவப்பு காதுகள் கொண்ட ஸ்லைடர் ஆமைகளைக் கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்தனர். மேல் விசாரணைக்காக பெசன்ட் நகரில் உள்ள யூனியன் வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். ஒன்றிய வன உயிரின பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் வந்து, ஸ்லைடர் ஆமைகளை ஆய்வு செய்தனர்.

அவற்றில், 12 இறந்து கிடந்தன. மேலும், 19 அல்பினோ சிவப்பு காது ஸ்லைடர் ஆமை வகையைச் சேர்ந்தவை என்பதும் தெரியவந்தது. மேலும், கடத்தல் காரர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மலேசியாவில் இருந்து எந்த ஆவணமும் இல்லாமல் இந்தியா வந்துள்ளதை கண்டறிந்தனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த ஆமைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு, மற்ற விலங்குகளுக்கு தொற்று ஏதும் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு நோக்கங்களுக்காக சுங்க அதிகாரிகள் 4,986 உயிருள்ள ஆமைகளை மலேசியாவிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்தனர், அதே நேரத்தில் இறந்த 12 ஆமைகள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யப்பட்டன.

இதையும் படிங்க

நாசிக் டு சென்னை.. வெங்காய எக்ஸ்ப்ரஸ் இயக்கம்.. இதன் நோக்கம் என்ன? Onion Express Train

நாசிக் டு சென்னை.. வெங்காய எக்ஸ்ப்ரஸ் இயக்கம்.. இதன் நோக்கம் என்ன?

Onion Express Train: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து சென்னைக்கு வெங்காய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது….

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து.. சென்னையில் இரண்டாவது விமான நிலையம் எங்கு அமைகிறது? Parandur airport project

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து.. சென்னையில் இரண்டாவது விமான நிலையம் எங்கு

Parandur airport project; தமிழகத்தில் பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், சென்னை இரண்டாவது விமான நிலையம் எங்கு அமைக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது….

சென்னை கொசஸ்தலை ஆற்றில் கரை ஒதுங்கிய மீன்கள், நண்டுகள்.. குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி Kosasthalai River

சென்னை கொசஸ்தலை ஆற்றில் கரை ஒதுங்கிய மீன்கள், நண்டுகள்.. குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி

Kosasthalai River: எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில், ஞாயிற்றுக்கிழமை பெருமளவிலான மீன்கள், இறால்கள் மற்றும் நண்டுகள் செத்து கரை ஒதுங்கின….

இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு.. நடுவானில் சிக்கிய 224 பயணிகள்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு! Chennai Airport

இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு.. நடுவானில் சிக்கிய 224 பயணிகள்.. சென்னை விமான

Chennai Airport : சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….

திருநெல்வேலி-சென்னை வாராந்திர சிறப்பு ரயில். முழு விவரம்- நோட் பண்ணுங்க! Special Train

திருநெல்வேலி-சென்னை வாராந்திர சிறப்பு ரயில். முழு விவரம்- நோட் பண்ணுங்க!

Special Train: திருநெல்வேலியில் இருந்து சென்னை தாம்பரம் பகுதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com