Annamalai : திமுக ஆட்சி கால முறைகேடுகளை விசாரிக்கும் தற்போதைய தவெக அரசின் முயற்சி வரவேற்கத்தக்கது என்று “வி த லீடர்ஸ்” அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Annamalai : திமுக ஆட்சி கால முறைகேடுகளை விசாரிக்கும் தற்போதைய தவெக அரசின் முயற்சி வரவேற்கத்தக்கது என்று “வி த லீடர்ஸ்” அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Published on: June 26, 2026 at 5:16 pm
சென்னை, ஜூன் 26 2026: திமுக ஆட்சி கால முறைகேடுகளை விசாரிக்கும் தற்போதைய தவெக அரசின் முயற்சிக்கு வரவேற்பு தெரிவித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய சாலை ஒப்பந்த முறைகேடு வழக்கில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து, அவரது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியதை வரவேற்பதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது என்றும், விசாரணை விரைவாக முடிக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிச்சத்துக்கு வந்ததாகக் கூறப்படும் பல்வேறு ஊழல் விவகாரங்களையும் தமிழக அரசு விசாரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, பிஜிஆர் எனர்ஜி ஒப்பந்த முறைகேடு, ஆவின் தயாரிக்க முன்வந்தபோதும் தனியார் நிறுவனங்களிடம் அதிக விலைக்கு சத்துணவு கலவை வாங்கியதாகக் கூறப்படும் ஊட்டச்சத்து கிட் முறைகேடு, பொங்கல் வேட்டி-சேலை திட்டத்தில் பருத்திக்கு பதிலாக அதிக பாலியஸ்டர் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் ஆகியவற்றில் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், மாநில போக்குவரத்துத் துறையில் பிரதிபலிப்பு பலகைகள் உள்ளிட்ட கொள்முதல் முறைகேடுகள், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தில் (TNMSC) பூச்சிக்கொல்லி மருந்து கொள்முதல் விவகாரம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGA) தொடர்பான முறைகேடுகள் குறித்தும் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்றமும், நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனமும் ஒரே முகவரியில் செயல்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாய் பயணத்துக்குப் பிறகு, நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது தொடர்பான மர்மத்துக்கும் தமிழக அரசு விளக்கம் அளித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ரூ.2,47,130 கோடி கடன்.. வெள்ளை அறிக்கையில் தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com