சென்னை மெரினா கடலில் குதித்த இரு இளம் பெண்கள்.. போலீஸ் விசாரணையில் ஷாக்!

Chennai Marina: சென்னை மெரினா கடலில் குதித்த இரு இளம் பெண்களால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இவர்கள் எதற்காக கடலில் குதித்தார்கள்?

Published on: March 31, 2025 at 4:17 pm

சென்னை மார்ச் 31 2025: சென்னை மெரினா கடற்கரையில், இரண்டு இளம் பெண்கள் திடீரென குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார்கள். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டார்கள்; இந்த சத்தம் கேட்டு உடனடியாக அங்கு வந்த போலீஸ் ரோந்து படையினர் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

இந்த நிலையில் போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இரண்டு இளம் பெண்களும் சகோதரிகள் ஆவார்கள். இதில் மூத்த சகோதரியின் வயது 23 என்றும் இளையவளுக்கு 20 என்றும் தெரியவந்தது. இந்த இரு பெண்களும் சென்னை தேனாம்பேட்டையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளனர்.

மெரினா கடலில் குதித்தது ஏன்?

சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வந்த இந்த இரு சகோதரிகளின் தாய், தந்தை குடும்ப பிரச்சனையில் சிக்கித் தவித்துள்ளனர். இதற்கிடையில் இவர்களின் தாய்- தந்தை விவாகரத்து செய்து பிரிந்து விடலாம் என முடிவெடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: நீங்கள் எதிரில் இல்லை; முதலில் இதை புரிந்து கொள்ளுங்கள்.. விஜய்க்கு தமிழிசை அட்வைஸ்!

இந்த முடிவு இரு சகோதரிகளுக்கும் பேரடியாக விழுந்துள்ளது. இதனால் இருவரும் செய்வது அறியாமல் திகைத்துள்ளனர். இனி நமக்கு யாரும் இல்லை; இந்த உயிரை போக்கிவிடலாம் என எண்ணி உள்ளனர்.
இதன் அடிப்படையில் வேறு வழியின்றி விரக்தியின் காரணமாக இரு சகோதரிகளும் சென்னை மெரினா கடலில் குதித்துள்ளனர். அப்போது அங்கிருந்த ரோந்து படையினர் இரு சகோதரிகளையும் பத்திரமாக மீட்டு விட்டனர்.

சகோதரிகளின் கதை தெரிந்து உடனடியாக அப்பெண்களின் உறவினருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். தொடர்ந்து இரு சகோதரிகளையும் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் இது போன்ற எண்ணங்கள் எப்போதும் வரக்கூடாது; தைரியமாக வாழ வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார்கள்.

தொடர்ந்து இளம் பெண்களின் தாய் தந்தையரையும் வரவழைத்து அவர்களுக்கும் போலீசார் அறிவுரைகள் வழங்கினார்கள். சென்னை மெரினா கடற்கரையில் இரு இளம் பெண்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதையும் படிங்க: நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தவில்லையா? அவ்வளவுதான்.. ஜப்தி போகும் அபாயம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com