ஐ.பி.எல். ஏலத்தில் யார் யார் எவ்வளவு தொகைக்கு எடுக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஐ.பி.எல். ஏலத்தில் யார் யார் எவ்வளவு தொகைக்கு எடுக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Published on: November 24, 2024 at 7:20 pm
IPL 2025 Mega Auction | பதினெட்டாவது ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான மெகா ஏலம் ஜட்டா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலம் இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்நிலையில் ஏலத்தில் இடம்பெற்று இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிக தொகையான ரூ. 26.75 கோடிக்கு பஞ்சாப் அணியினால் வாங்கப்பட்டார். பின்னர் அடுத்த சிறிது நேரத்தில் டெல்லி அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த ரிஷப பண்ட்-இன் பெயர் ஏலத்தில் வந்தது.
அவரை தங்கள் அணிக்கு எடுக்க அணிகள் ஆர்வம் காட்டின. இறுதியில் லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே ரிஷப் பண்ட்-ஐ ஏலத்தில் எடுப்பதில் போட்டி நிலவியது. இறுதியில் ரூ.27 கோடிக்கு லக்னோ அணி அவரை ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற ஸ்ரேயாஸ் ஐயரின் சாதனையை சில நிமிடங்களிலேயே ரிஷப் பந்த் முறியடித்தார்.
இதையும் படிங்க ‘பணம் பிரச்னை அல்ல’.. டெல்லி அணியில் இருந்து வெளியேறியது ஏன்? ரிஷப் பந்த் பதில்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com