‘இந்தியா- பாக்., மோதினால் பணம் கொட்டும்; ICC ஏன் இதை செய்யக்கூடாது’: பசித் அலி

India Vs Pakistan | பாகிஸ்தானுக்கு இந்திய அணி வரவில்லை என்றால் பாகிஸ்தானுக்கு 2 புள்ளிகள் கொடுங்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார்.

Published on: November 12, 2024 at 11:27 pm

India Vs Pakistan | 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. தொடருக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதற்கு காரணம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாது. தாங்கள் விளையாடும் போட்டியை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது என பி.சி.சி.ஐ., சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்துள்ளது.

இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
மேலும், இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் தொடரிலிருந்து தாங்கள் விலகி விடுவோம் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி, 1996 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இலங்கைக்கு சென்று லீக் போட்டியில் விளையாட மாட்டோம் என்று கூறிவிட்டது. இதனால் இலங்கை அணிக்கு 4 புள்ளிகள் (தலா 2 புள்ளிகள்) வழங்கப்பட்டது.

அது போல் இப்போதும் செய்தால் என்ன?. அல்லது இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே பிரிவில் போடாமல், பாகிஸ்தானை வேறு பிரிவிலும் இந்தியாவை வேறு பிரிவிலும் போடலாமே?. ஐ.சி.சி அதை செய்யவே செய்யாது.

ஏனென்றால் இந்தியாவும், பாகிஸ்தானும் லீக்போட்டிகளில் மோதினால் தான் அதிக அளவு பணம் ஐ.சி.சி-க்கு கிடைக்கும். அmதனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் பாகிஸ்தானுக்கு 2 புள்ளிகளை கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க இங்கிலாந்து கேப்டனுடன் மோதல்; மேற்கிந்திய வீரருக்கு தடை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com