மீண்டும் பறந்த தொப்பி; திடீர் ராஜினாமா: பாபர் அசாம் பதில் என்ன?

Babar Azam | பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Published on: October 2, 2024 at 1:55 pm

Babar Azam | பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது தனிப்பட்ட ஆட்டத்தை மேம்படுத்தும் விதமாக கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பாபர் அசாம் இதற்கு முன்பு பாகிஸ்தானின் அனைத்து வடிவ கேப்டனாக இருந்தார். இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதையடுத்து அவர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி அவருக்குப் பிறகு டி20 ஐ கேப்டனாக ஆனார். ஆனால் மீண்டும் கேப்டன்சி பாபர் வசம் சென்றது.
அவர் மார்ச் 2024 இல் கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டார்.இருப்பினும், 2024 டி 20 உலகக் கோப்பையில் குழு நிலையிலிருந்து வெளியேறியதால், பாகிஸ்தான் கேப்டனாக அவரது இரண்டாவது பதவிக்காலம் வெற்றிபெறவில்லை.

அப்போது அமெரிக்க அணியிடம் பாகிஸ்தான் தோற்றது. இந்த நிலையில் வங்கதேச அணியிடம் பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அழுத்தம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் பாபர் அசாம் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில், “பாகிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். நான் இனி எனது ஆட்டங்களில் கவனம் செலுத்த உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “கேப்டன் என்பது ஒரு பலனளிக்கும் அனுபவமாக உள்ளது, ஆனால் இது ஒரு குறிப்பிடத்தக்க பணிச்சுமையை சேர்க்கிறது. நான் எனது செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்க விரும்புகிறேன், எனது பேட்டிங்கை ரசிக்க விரும்புகிறேன், மேலும் எனது குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிட விரும்புகிறேன், இது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க

ILT ஏலத்தில் விலைபோகாத அஸ்வின்.. ஒருவரும் கண்டுக்கல! ILT20 2026 auction

ILT ஏலத்தில் விலைபோகாத அஸ்வின்.. ஒருவரும் கண்டுக்கல!

ILT20 2026 auction: சர்வதேச டி20 லீக் (ILT) ஏலத்தில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரனை ஒருவரும் ஏலத்தில் எடுக்கவில்லை….

ஆஸ்திரேலியாவில் அதிவேக சதம்.. வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி! Vaibhav Suryavanshi

ஆஸ்திரேலியாவில் அதிவேக சதம்.. வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

Vaibhav Suryavanshi: ஆஸ்திரேலியாவில் அதிவேக சதம் அடித்து வரலாறு படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட்டர் வைபவ் சூர்யவன்ஷி….

நெருக்கடி கொடுத்த பாகிஸ்தான் வீரர்கள்.. திலக் வர்மா ஓபன் டாக்! Tilak Varma

நெருக்கடி கொடுத்த பாகிஸ்தான் வீரர்கள்.. திலக் வர்மா ஓபன் டாக்!

Tilak Varma: “பாகிஸ்தான் வீரர்கள் நெருக்கடி கொடுத்தார்கள்; நான் நிதானமாக நின்று ஆடினேன்” என இந்திய கிரிக்கெட்டர் திலக் வர்மா கூறினார்….

அதை சர்ச்சையாக பார்க்கவில்லை.. உண்மையான கோப்பை.. சூர்ய குமார் யாதவ்! Suryakumar Yadav

அதை சர்ச்சையாக பார்க்கவில்லை.. உண்மையான கோப்பை.. சூர்ய குமார் யாதவ்!

Suryakumar Yadav: பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவருமான ஏ.சி.சி தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை வாங்க மறுத்துவிட்டது குறித்து பேசியுள்ளார் இந்திய கேப்டன்…

.

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com