ஐயப்பனை தரிசிக்க கூடுதல் நேரம் ; கேரள தேவசம்போர்டு

சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் தரிசிக்கும் நேரத்தை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கேரள தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

Published on: November 26, 2024 at 12:46 pm

Sabarimala | ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் சபரிமலை திருநடை மண்டல மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்படும். இந்த பூஜை 41 நாட்கள் நடைபெறும். இந்த நிலையில் கோவில் நடை நவம்பர் 15 திறக்கப்பட்டது.

இந்த மகர விளக்கு சீசன் டிசம்பர் 26 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இரண்டாம் கட்டமாக டிசம்பர் 30ம் தேதி நடை திறக்கப்பட்டு, 20, ஜனவரி 2025 காலை 6 மணிக்கு சாத்தப்படும். முன்னதாக மகரஜோதி தரிசனம் நடைபெறும். ஐயப்ப சாமியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை கூடுதல் நேரம் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திருதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரஷாந்த் கூறுகையில், சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது. பம்பை முதல் சன்னிதானம் வரை அனைத்து இடங்களிலும் ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சில்வர் பாட்டில்களில் சுக்குநீர், வெந்நீர் ஆகியவை 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வருகிறது.

பதினெட்டாம் படி ஏரி சன்னிதானம் வரும் பக்தர்கள் கொடிமரத்தை வணங்கி விட்டு இடப்புறம் மேம்பாலம் ஏறாமல் நேரடியாக சன்னிதான நுழைவாயில் வழியாக கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு செல்லும் பட்சத்தில் ஐயப்ப பக்தர்கள் கூடுதல் நேரம் ஐயப்பனை தரிசனம் செய்ய முடியும். மேலும் சாமி தரிசனத்திற்கு பிறகு ஐயப்ப பக்தர்கள் வெளியே செல்லவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. அடுத்த ஐயப்ப அடுத்த சீசனுக்கு முன்னதாக இது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

இதையும் படிங்க ஒருமுறை அணிந்த மாலையை சுத்தம் செய்து மறுமுறை அணியலாமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com