கடும் வறுமை; வேதப்பட்டரை சோதித்த சிவபெருமான்: திருநெல்வேலி பிறந்த கதை!

Mythology | திருநெல்வேலின்னு இந்த ஊருக்கு பேரு வர காரணம் தெரியுமா?

Published on: October 25, 2024 at 12:45 pm

Mythology | முன் ஒரு காலத்தில் வேதபட்டா் என்பவர் சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டவராக இருந்தார். இவர் நாள்தோறும் தவறாது சிவ பூஜைகள் செய்து வந்தார். தன் மீது அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதப்பட்டரை சோதிக்க சிவபெருமான் அவரை கடுமையான வறுமைக்குள் ஆளாகினார். இருப்பினும் அவர் தினம்தோறும் சிவ பூஜை செய்வதை விடவில்லை.

ஒரு கட்டத்தில் பூஜை செய்வதில் சிரமம் ஏற்பட்டது. பூஜை தடைபடக்கூடாது என்று எண்ணிய வேதப்பட்டார் பொதுமக்களிடம் யாசகம் வாங்க சென்றார். இறைவனின் நெய்வேத்தியத்திற்காக வீடு வீடாகச் சென்று நெல்மணிகளை சேகரித்தார். பின்னர் இறைவனுக்கு அமுது செய்யவேண்டி நெல்லை சன்னதி முன்பு காய வைத்துவிட்டு குளிப்பதற்காக பொருநை ஆற்றிற்கு சென்றார்.

அப்போது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. குளித்துக் கொண்டிருந்த வேதப்பட்டர் நெல்மணிகள் நனைந்து விடுமே என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கும் பொழுது காய வைத்திருந்த நெல் மட்டும் நனையாமல் கதிரவன் ஒளியால் நாற்புறமும் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டு இருந்ததை கண்டு வியந்தார். உடனே வேதபட்டர் இந்த அதிசயத்தை பாண்டிய மன்னனிடம் தெரிவித்தார்.

மன்னரும் ஓடோடி வந்து இந்த அதிசயத்தை கண்டு வியந்தார். நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் நெல்வேலி நாதர் என்று இறைவனை அழைத்தார். மேலும் வேணுவனம் என்ற பெயரில் இருந்த அப்பகுதியை நெல்வேலி என மாற்றி அமைத்தார். பின்னர் திரு என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது.

திருநெல்வேலி எனப் பெயர் வரக்காரணமாக இருந்த இந்த அதிசய நிகழ்வு நெல்லையப்பர் கோயில் தைப்பூசத்திருவிழாவில் ஆண்டுதோறும் 4வது நாள் அன்று நெல்லுக்கு வேலியிட்ட திருநாளாக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : கிருஷ்ணர் கூறும் 5 வாழ்க்கை உபதேசம்; இது தெரிஞ்சா நீங்க கில்லி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com