ஒருவருக்கு ஒரு வாக்கு.. SIR கொண்டுவரப்பட்டது ஏன்? மத்திய சட்ட அமைச்சர் விளக்கம்!

Arjun Ram Meghwal: வாக்காளர் சிறப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது ஏன் என்பதை குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார்.

Published on: December 16, 2025 at 11:20 am

புதுடெல்லி, டிச.16, 2025: நாடாளுமன்ற மாநிலங்களவையில் திங்கள்கிழமை (டிச.15, 2025) தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம் மீண்டும் தொடங்கியது. இந்த விவாதத்தில் பேசிய மத்திய சட்ட மற்றும் நீதி அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், நரேந்திர மோடி அரசின் “சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம்” என்ற கொள்கையின் கீழ் நாடு முன்னேற்றம் நோக்கி செல்கிறது” என்றார்.

மேலும் அவர், போலியான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காக நடைபெறும் வாக்காளர் சிறப்பு திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) கொண்டுவரப்பட்டது. இதற்காகவே எஸ்.ஐ.ஆர் பயிற்சி நடத்தப்படுகிறது; அரசு சீர்திருத்தங்களை கொண்டு வர உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, எஸ்.ஐ.ஆர்.ஐ எதிர்க்கும் நபர்கள், இந்திய அரசியலமைப்பின் நிறுவனர் பாபா சாகேப் அம்பேத்கர் முன்வைத்த “ஒரு நபர், ஒரு வாக்கு, ஒரு மதிப்பு” என்ற கொள்கையை மறந்துவிட்டனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். இந்த விவாதத்தில் பங்கேற்ற அ.தி.மு.க.வின் எம். தம்பிதுரை, சுத்தமான மற்றும் துல்லியமான வாக்காளர் பட்டியல் ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது, வெளிப்படைத்தன்மை வாக்காளர்களை அதிகாரமளிக்கிறது என்று கூறினார்.

அவர், தேர்தல் பிரசாரம் ஒரு முக்கியமான செயல்முறை, அரசியல் கட்சிகளுக்கு பிரசாரம் செய்ய உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார். தேர்தல் ஆணையம் ஒரு ஆரோக்கியமான ஜனநாயக அமைப்பின் மிக முக்கியமான பகுதி என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: மக்களவையில் அணுசக்தி மசோதா தாக்கல்.. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com