ஜம்மு காஷ்மீரில் உள்ள 24 தொகுதிகளில் இன்று (புதன்கிழமை) முதலகட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
ஜம்மு காஷ்மீரில் உள்ள 24 தொகுதிகளில் இன்று (புதன்கிழமை) முதலகட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
Published on: September 18, 2024 at 7:39 am
Jammu and Kashmir | சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக ஜம்மு காஷ்மீரில் ஏழு மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு இன்று (செப்.18,2024) தொடங்கியது.
இது ஜம்மு காஷ்மீரில் யூனியன் பிரதேசத்தில் நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் ஆகும். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுக்கும் முதல் வாக்கெடுப்பும் இதுவாகும்.
முதல்கட்ட வாக்குப்பதிவு
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 24 சட்டசபை தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது என்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரில் உள்ள முக்கிய வேட்பாளர்களில் CPI (M) இன் முகமது யூசுப் தாரிகாமியும் அடங்குவர், அவர் குல்காம் தொகுதியில் இருந்து தொடர்ந்து ஐந்தாவது முறையாக போட்டியிடுகிறார்.
முக்கிய வேட்பாளர்கள்
மேலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பொதுச் செயலாளர் குலாம் அஹ்மத் மிர் மூன்றாவது முறையாக டூருவில் இருந்து போட்டியிடுகிறார்.
அதே நேரத்தில் தேசிய மாநாட்டின் சகினா இடூ தம்ஹால் ஹாஜிபோராவிடம் இருந்து போட்டியிடுகிறார். பிடிபியின் இல்திஜா முஃப்தி மற்றும் வஹீத் பாரா ஆகியோர் முறையே ஸ்ரீகுஃப்வாரா-பிஜ்பெஹாரா மற்றும் புல்வாமா சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
தோடா, கிஷ்த்வார், அனந்த்நாக், புல்வாமா, குல்காம், சோபியான் மற்றும் ராம்பான் ஆகிய மாவட்டங்கள் மற்றும் தெற்கு காஷ்மீர் ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் 24 சட்டமன்றத் தொகுதிகளில் 23.27 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 11.76 லட்சம் ஆண்கள் மற்றும் 11.51 லட்சம் பெண்கள் ஆவார்கள்.
அதிகளவில் வாக்களிக்க மோடி அழைப்பு
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இநத நிலையில், இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள அனைவரும் அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
As the first phase of the Jammu and Kashmir Assembly elections begins, I urge all those in constituencies going to the polls today to vote in large numbers and strengthen the festival of democracy. I particularly call upon young and first-time voters to exercise their franchise.
— Narendra Modi (@narendramodi) September 18, 2024
இதையும் படிங்க : ‘ஜம்மு காஷ்மீரில் இறுதி மூச்சை இழுக்கும் பயங்கரவாதம்; வம்ச அரசியல்’: பிரதமர் மோடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com