Telangana | தெலங்கானா காங்கிரஸ் அமைச்சர் சுரேகா சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கள் சர்சசையாகின. இவர் நடிகர் நாகசைதன்யா, சமந்தா காதல் திருமணம் விவாகரத்து குறித்து பேசினார். அப்போது இதற்கு காரணம் தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி. ராமாராவ்தான் காரணம் என்றார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு நடிகர் நாகர்ஜூனா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமைச்சர் சுரேகா தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரி, தனது கருத்துக்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.
அமைச்சர் சுரேகா, “பி.ஆர்.எஸ் தலைவர் கே.டி ராமா ராவ் நடிகைகளின் போன்களை ஒட்டுக்கேட்பார். பின்னர் அவர்களின் பலவீனங்களை கண்டறிந்து பிளாக்மெயில் செய்வார். நடிகை சமந்தா விவகாரத்திலும் இதுதான் நடந்தது. இது நாக சைதன்யா குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும்” என்றார். மேலும், போதைப் பொருள் பயன்பாடு விவகாரத்திலும் சமந்தா பெயரை இழுத்துப் பேசி இருந்தார்.
இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமந்தா ரூத் பிரபு மற்றும் நாக சைதன்யா இருவரும் முன்னணி நடிகர்கள் ஆவார்கள். மேலும், தெலுங்கு திரையுலகில் மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பமான அக்கினேனியை சேர்ந்தவர் நாக சைதன்யா ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Jairam Ramesh : தி.மு.க எம்பிக்கள் உடன் தொடர்பில் இருக்கிறோம் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்….
Madurai Marathon Row : மாரத்தான் போட்டியில் மாணவ, மாணவிகள் 4 கி.மீ. தூரம் சென்றபோது கடும் வெயிலின் காரணமாக சிலர் மயக்கமடைந்தனர்….
Vijayan slams Rahul: ராகுல் காந்தியின் அணுகுமுறைகள் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்துகின்றன என கேரளத்தின் முன்னாள் முதலமைச்சர் பினராய் விஜயன் விமர்சித்துள்ளார்….
Meenakshi Natarajan’s nomination : மீனாட்சி நடராஜன் மாநிலங்களவை வேட்புமனு நிராகரிக்கப்பட்டது; இது கொடூரமானது என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….
INDIA bloc meeting: காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இதனை தி.மு.க. மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்