சபரிமலை சீசனை ஒட்டி கர்நாடகா – கேரளா இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சபரிமலை சீசனை ஒட்டி கர்நாடகா – கேரளா இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Published on: November 28, 2024 at 11:31 am
Updated on: November 28, 2024 at 11:32 am
Southern Railway | ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் சபரிமலை திருநடை மண்டல மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்படும். இந்த பூஜை 41 நாட்கள் நடைபெறும். இந்த நிலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இந்த மகர விளக்கு சீசன் டிசம்பர் 26 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இரண்டாம் கட்டமாக டிசம்பர் 30ம் தேதி நடை திறக்கப்பட்டு, 20, ஜனவரி 2025 காலை 6 மணிக்கு சாத்தப்படும். முன்னதாக மகரஜோதி தரிசனம் நடைபெறும். ஐயப்பனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் சபரிமலை வருகின்றனர். இந்நிலையில், பக்தர்கள் வசதிக்காக கர்நாடகா – கேரளா இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
சபரிமலை சீசனையொட்டி பக்தர்களின் வசதிக்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து அடுத்த மாதம் (டிசம்பர்) 5, 12, 19, 26 மற்றும் ஜனவரி 2, 9 ஆகிய தேதிகளில் மாலை 5.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்- 07313) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கேரள மாநிலம் கொல்லம் சென்றடையும். அதே போல, கொல்லத்தில் இருந்து அடுத்த மாதம் 6, 13, 20, 27 மற்றும் ஜனவரி 3, 10 ஆகிய தேதிகளில் மாலை 6.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07314) மறுநாள் இரவு 7.35 மணிக்கு ஹூப்ளி வந்தடையும்.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் இருந்து அடுத்த மாதம் 9, 16, 23, 30 மற்றும் ஜனவரி 6, 13 ஆகிய தேதிகளில் மதியம் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07317) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். அதே போல, கொல்லத்தில் இருந்து அடுத்த மாதம் 10, 17, 24, 31 மற்றும் ஜனவரி 7, 14 ஆகிய தேதிகளில் மாலை 6.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07318) மறுநாள் இரவு 10 மணிக்கு பெலகாவி வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க ஒருமுறை அணிந்த மாலையை சுத்தம் செய்து மறுமுறை அணியலாமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com