ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகன் சர்ச்சை? மத்திய அரசு 4 வாரத்தில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Rahul Gandhi’s citizenship row: காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பான மனு மீதான நிலை அறிக்கையை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு 4 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Published on: March 25, 2025 at 10:45 am

இந்திய சட்டங்களை மீறி ராகுல் காந்தி தன்னை பிரிட்டிஷ் (ஆங்கில குடிமகன்) என்று அறிவித்துக் கொண்டார் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றஞ்சாட்டினார். இந்த நிலையில், பிரிட்டிஷ் குடியுரிமை குறித்து, ராகுல் காந்திக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை (மார்ச் 24, 2025) நான்கு வார கால அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது. பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.ஆர் மசோதி மற்றும் நீதிபதி அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் குடியுரிமை குறித்த நிலை அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

புகார் என்ன?

2019 ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சுப்பிரமணிய சாமி புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் ராகுல் காந்தி தன்னை பிரிட்டிஷ் குடிமகன் என்று அடையாளப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது இந்திய அரசியலமைப்பு மற்றும் குடியுரிமைச் சட்டத்தை மீறுவதாகவும், பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்திருப்பதற்குச் சமம் என்றும் சுப்பிரமணிய சாமி வாதிட்டுள்ளார்.

இதற்கிடையில், ராகுல் காந்தியின் பிரிட்டிஷ் குடியுரிமையை தெளிவுபடுத்துமாறு அரசாங்கம் ராகுல் காந்திக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருப்பினும், அவர் பதிலளிக்கவில்லை, மேலும் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையும் சுப்பிரமணிய சாமி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் முன்னதாக அலகாபாத் நீதிமன்றத்தில், காங்கிரஸ் கட்சியின் ரேபரேலி எம்பி ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை வைத்திருப்பதாகக் கூறப்படும் மனு பரிசீலனையில் இருப்பதாக மத்திய அரசு கூறியிருந்தது. இந்த நிலையில் நீதிமன்றம் மேற்கூறிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு 2025 ஏப்ரல் 21ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க : விசாகப்பட்டினத்தில் கரை ஒதுங்கிய விஷ்ணு சிற்பம்.. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com