விசாகப்பட்டினத்தில் கரை ஒதுங்கிய விஷ்ணு சிற்பம்.. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு!

Andhra Pradesh: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷ்ணு சிலை ஒன்று கரை ஒதுங்கியது. இந்த சிலையை கைப்பற்றிய தொல்பொருள் ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.

Published on: March 23, 2025 at 2:53 pm

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ருசிகொண்டா கடற்கரையில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் உடன் வடிவமைக்கப்பட்ட விஷ்ணு சிற்பம் ஒன்று கரை ஒதுங்கியது. இந்த விஷ்ணு சிற்பம் மூன்று புள்ளி ஒரு அடி உள்ளது. மேலும் சிலை இரண்டு துண்டுகளாக உடைந்து உள்ளது. இந்த சிற்பத்தை முதலில் ருசிகொண்டார் பகுதியைச் சேர்ந்த தீபாளி நாயுடு என்பவர் கண்டுபிடித்தார்.

இவர் விஷ்ணுவின் சிலை அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் இருப்பதை பார்த்தவுடன் இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இவர் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த தொல்லியல் துறை அதிகாரிகள் சிலையை கைப்பற்றி ஆய்வுகள் நடத்தினார்கள்.

நமக்கு கிடைக்கப் பெற்ற இந்த சிலை இரண்டு துண்டுகளாக உள்ளது. மேலும் இந்தச் சிலை அப்பகுதியைச் சேர்ந்த சிலையாக இருக்க வாய்ப்பு இல்லை எனவும் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 12 முதல் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இந்த சிலை இருக்கலாம் என தெரிவித்துள்ள தொல்லியல் துறை அதிகாரிகள், இப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு விஷ்ணு சிற்பங்கள் கோண்டலைட் எனப்படும் கற்களால் ஆனவை.

இதையும் படிங்க : தொகுதி மறுசீரமைப்பு, தென்னிந்தியா மீது தொங்கும் கத்தி: பினராய் விஜயன்!

ஆனால் இந்தச் சிலை கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்றனர். மேலும் இந்த சிலை குறித்து திருப்பதி தேவஸ்தான ஆவணங்களின்படி இது ஜனார்த்தனன் என்ற வடிவத்தைக் கொண்டது என தெரிவித்தனர். ஜனார்த்தனன் என்ற சமஸ்கிருத சொல்லானது, ஜனா என்றால் மக்களையும் அர்த்தனா என்றால் துன்பத்தை நீக்குபவன் என்பதையும் குறிக்கிறது.

மேலும் இந்த சிலை ஏதாவது ஒரு கோவிலின் இருந்திருக்கலாம் என்றும் தெய்வ விக்கிரகங்கள் சேதப்படுத்தப்படும் போது அவை கடலில் மூழ்கடிக்கப்படும் என்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது இந்தச் சிலையானது, விசாகப்பட்டினத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் ஒதுங்கிய இந்த விஷ்ணு சிலையை, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மிகவும் பயபக்தியோடு வணங்கினார்கள். இந்தச் சிலை குறித்து பேசிய தொல்லியல் துறை அதிகாரிகள், ” மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரானைட் கல்லில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்கள். இதனால் இச்சிலை குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டை ஆங்கிலேயர்கள் அரசியல் ரீதியாக உருவாக்கினர்: சி.பி ராதாகிருஷ்ணன்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com