நொய்டா ஏர்போட்டில் வந்திறங்கிய முதல் விமானம்.. பயணிகள் உற்சாகம்!

IndiGo lands first at Noida : நொய்டா விமான நிலையம் தனது வணிக செயல்பாடுகளை தொடங்கியுள்ளது.

Published on: June 15, 2026 at 1:51 pm

நொய்டா, ஜூன் 15, 2026: நொய்டா சர்வதேச விமான நிலையம் வணிகச் செயல்பாடுகளைத் தொடங்கிய நிலையில், முதல் விமானமாக இண்டிகோ 6E-2278 லக்னோவில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை 7:55 மணிக்கு ஜெவாரில் தரையிறங்கியது. பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 28 அன்று திறந்து வைத்த இந்த புதிய விமான நிலையம், பயணிகள் சேவைகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

விமானம் தரையிறங்கியதும், பயணிகள் கைதட்டியதுடன், நீர் பீரங்கி மரியாதை செலுத்தப்பட்டு வரவேற்கப்பட்டது. இதன் திரும்பும் சேவையான இண்டிகோ 6E-2279, மாலை 6:55 மணிக்கு நொய்டாவில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு லக்னோவை அடையும் என திட்டமிடப்பட்டுள்ளது.

அகசா ஏர் நிறுவனம் ஜூன் 16 முதல் நொய்டா விமான நிலையத்திலிருந்து பெங்களூரு மற்றும் நவி மும்பைக்கு தினசரி சேவைகளைத் தொடங்க உள்ளது. இதன் மூலம், இந்த விமான நிலையத்தில் செயல்படும் இரண்டாவது விமான நிறுவனம் ஆகிறது.

நொய்டா சர்வதேச விமான நிலைய லிமிடெட் (NIAL) வெளியிட்ட அறிவிப்பின்படி, விமான நிலையத்தின் முதல் சரக்கு விமானம் ஜூன் 17 அன்று புறப்பட உள்ளது. இந்த சரக்கு சேவை உள்நாட்டு வழித்தடத்தில் இயக்கப்படும்.

இதையும் படிங்க : ராகுல் காந்தியின் அணுகுமுறை பா.ஜ.க.வை வலுப்படுத்துகிறது.. பினராய் விஜயன்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com