புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ; வெளுக்கப்போகும் கனமழை ; வானிலை மையம் அலர்ட்

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published on: December 13, 2024 at 12:53 pm

Updated on: December 14, 2024 at 10:14 am

India Meteorological Department | வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்தமிழக மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

தொடர் மழையால் குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, காவலர்கள் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 16-ம் தேதி முதல் மீண்டும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com