ஹரியானாவில், பகுஜன் சமாஜ் கூட்டணி வெற்றி பெறும் பட்ச்தில் தலித் துணை முதலமைச்சர் நியமிக்கப்படுவார் என மாயாவதி கூறியுள்ளார்.
ஹரியானாவில், பகுஜன் சமாஜ் கூட்டணி வெற்றி பெறும் பட்ச்தில் தலித் துணை முதலமைச்சர் நியமிக்கப்படுவார் என மாயாவதி கூறியுள்ளார்.
Published on: September 26, 2024 at 10:52 am
Haryana | Mayawati | ஹரியானாவில் ஐ.என்.எல்.டி-பி.எஸ்.பி ஆட்சி அமைந்ததும் ஐ.என்.எல்.டி.யின் அபய் சிங் சவுதாலா முதலமைச்சராக பதவியேற்பார் என்று மாயாவதி கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி இந்திய தேசிய லோக்தளத்துடன் (ஐஎன்எல்டி) கூட்டணி அமைத்து ஹரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், ஹரியானாவில் அடுத்த அரசாங்கத்தை பகுஜன் சமாஜ் அமைத்தால், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் துணை முதல்வர் நியமிக்கப்படுவார் என்று கூறினார். மேலும், ஹரியானாவில் ஐஎன்எல்டி-பிஎஸ்பி ஆட்சி அமைந்தவுடன், ஐஎன்எல்டியின் அபய் சிங் சவுதாலா முதலமைச்சராக வருவார் எனவும் அவர் உறுதியளித்தார்.
ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள உச்சானாவில் நடைபெற்ற பேரணியில் மாயாவதி உரையாற்றினார். அப்போது இதனை அவர் தெரிவித்தார்.
ஹரியானாவில் உள்ள பிஷ்னோய் சமூகத்தினரின் வாக்களிக்கும் உரிமையை மதிக்கும் வகையிலும், அவர்களின் பாரம்பரியத்தை மதிக்கும் வகையிலும் அக்டோபர் 1-ம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
தொடர்ந்து, ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இரு தேர்தல்களுக்கான வாக்கு எண்ணும் நாள் அக்டோபர் 4-ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 8-ஆம் தேதியாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அரசின் கொள்கையை தீர்மானிப்பது யார்? கங்கனாவா? மோடியா? ராகுல் கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com